எத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…!
மருவூரார்!
எத்தனை வழிகள். .
கொடுத்தாய் இறைவா...!
எங்களை பார்த்து. ...
எதாவது நிலையில். .
வருவாய் மனிதா..
எது தகுமோ
எடுத்துக்கொள்
என்றனை எளிதா....!
மந்திரம் படிக்கலாம். ..
மனம் நிறை தொண்டில்
துதிக்கலாம்!
முடியா நிலையில். ..
மந்திர ஒலி...ஒலிக்கலாம். .
செவிக்கெலாம்...
சேவிக்கலாம். ..
வேள்வியில் கலக்கலாம். .
உருள்வலம் உருளலாம்...
அமைதியா எண்ணி..
தியானத்தில்...
மருவூரார்!
எதற்கெம்மை படைத்தனை
இடருறும்போ
தணைத்தனை...
சிதறாதெமை சேர்த்தனை..
சிறகெனநீ இருந்தனை...
உதறிடாதுள நிலையினை.
உணர்ந்தபத இறையனே..
பதறவிடா வெள்ளரி..
பழவீடெமெக் கருளனே!...
அய்யா...
மருவூர் வாழ்..
மகாதேவா....
மருந்தாலும் அன்பாலும்
மாறா பழவினை..
இருந்தாலே என்செய்வேன்
விழிஒளி எரிஇனி!
அருந்தவம் தொண்டுதுதியு
ஆற்றா வயதினி..
தரும்வழியு மனமறக்கும்
தடுமாறுந் நிலைசனி..
பருந்தாகி வந்தெமை..
பற்றியருள் பரமனே..!
?
....சபா ஸ்ரீமுஷ்ணம். ..
உன்னருகில் வந்ததுதான் தெரியும்!
மருவூரார்!
உன்னருகில்
வந்ததுதான் தெரியும்!
உணர்வலைகள்
என்ன ஆச்சு. மயக்கம்!
உன்..
விழியை கவனித்தேனா?
மொழியை கவனித்தேனா?
உதடசைவை
கவனித்தேனா?
அங்கு நடப்பதை
நினைத்தானா?
புரியாத உலகுக்கு
போய் வந்தேன்!
புரிந்தாலும் கூறமுடியா
ஊமையாய் நின்றேன்!
சுற்றி உள்ளவர் கூறுவது
உரைக்கவில்லை!
சுயநினைவு இல்லையே..
குருநாதா. .
என்ன சொன்னாய்
நினைவில்லை!
பற்றிய பாதத்தில்
மலரிட்டேன்!
பரலோக சுகமதில்
மிதந்திட்டேன்!
சொல்கிறேனா..
உளறுகிறேனா..
புரியவில்லை. .
சொல்லவந்த
வார்த்தைகளும்..
வரவுமில்லை!
மறுபடியும் மறுபடியும்
உனது மொழி...
ஒலிக்குது ஒலிக்கிது..
செவியின் வழி!
கருவறையா..
அருட்கூடமா..
புரியவில்லை!
கணநேரம் மறந்தநிலை
அறியவில்லை!
உன்னருகில்...
எனக்குப் பிடிக்கும்!
அம்மா.!
உன் அழகிய முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கப் பிடிக்கும்!
உன் கருணை விழிகள் கனிவுடன் என்னைப் பார்க்கிறதா? என்று ஏங்குவது எனக்குப் பிடிக்கும்!
உன் அழகிய உதடுகள் மகளே!என்று அழைக்காதா? என என் மனம் தவிப்பது...
நீ தெய்வமோ சித்தரோ
அம்மா...!
நீ_தெய்வமோ.. சித்தரோ...!!
எனக்கு_தெரியாது...!!
தெளிவானேன் உன்னாலே...!!
அதை சொல்லமுடியாது....!!!
பயம்..
படபடப்பு
நடுக்கம்..
மனகலக்கம்..
எல்லாம் போய் வந்தது...
தனி இலக்கம்....!!
அவதாரம்....!!
பரம்பொருள்_நீ #என்றார்கள்..!!
அம்மா_என்று
#உன்னிடம்_வந்தேன்....!!
அனைவரும் மதித்து வந்தார்கள்....!!!
எனக்கென்று முகவரி தந்தார்கள்...!!
'வாங்க சக்தி'
கைகூப்பி வணங்குகிறார் உன்னாலே....!!!
மதிப்பும்
மரியாதையும்
கிடைக்கிறது
தன்னாலே....!!
பதராகி_போயிருப்பேன்",
காற்றோடு....!!
பதறாதே' #என்றணைத்தாய்
உன்னோடு.....!!!
எண்ணுமுன்னே...