நின்.. திருவடியில் எம்மை சேரு!
மருவூரார்!
புழுதியோடு இருந்தாலும்
அழுதுவரும்
குழந்தையினை..
அள்ளிக்கொள்ளும்
தாயை போல...
புலன்வழியில் ஆடினாலும்
உன்னடியே
கதியென்றால்
அரவணைப்பாய்
ஆசை தீர..!
விழுதெனவே விழும்போது
வேதனையை
தீர்த்திடுவாய்..
வேறென்ன
வேணும் கேட்க?
விண்ணவரும்
மண்ணவரும்
வேண்டிதேடும்
பரமசுகம்..
விளையாடுதே.
நானும் பார்க்க..!
எழும்பிரச்சனை
எல்லாமும்
இருமுடியை
தோள்தாங்க
ஏற்றுதருவாய்..
மாற்றம் நேரும்..
இனியஉனது
திருப்பெயரை..
எழுதிசொல்லி
இடைவிடாது..
இன்பங்கொள்வார்
ஏற்றம் சேரும்!
நழுவவிட மனமில்லை. .
நாயகனே இதுபோல்இனி
அவதாரம் உண்டா கூறு?
நான்'மறந்து நின்றாலும்
நீமறவா
எனைதேற்றி..நின்..
திருவடியில்
?எம்மை சேரு!
.....சபா ஸ்ரீமுஷ்ணம். .
நின்… திருவடிக்கும் விழி உண்டு!
மருவூரார்!
நின்...
திருவடிக்கும் விழி உண்டு!
துதிப்போர்க்கு பலன் உண்டு!
வானளாவிய இறையை..
மானுடமான மறையை..
நானுடன் இருக்கும்..
நற்பாக்கியம் கண்டு..
ஊனுடல் உள்ளம்..
உருகுதம்மா..நின்று!
போதித்தோர்..உண்டு!
உன்னைபோல்..
சாதித்தோர் உண்டா?
தெய்வமா இருந்தாலும். .
மானிடரை மதித்த
மகான்நீ!
அரசாங்கம் தந்த பத்மஸ்ரீ. .
அங்குகூட பரம்பொருள்..
பக்தர்களுக்காக செய்த
அற்புதத்தை
கொஞ்சம் கூட காட்டிக்காத..
அமைதியாய் பெற்ற..
ஆதிசக்தி குணாள
மகேசன்நீ!மற்றவர்கள் வாங்குவது
அவரவர்...
மருவூரார்!
எதிலும் மனம்
லயிக்கவில்லை..
இதயம் வலி..
பொறுக்கவில்லை...
உண்ண முடியவில்லை..
உறங்க முடியவில்லை..
உனக்கு உடல்நிலையில். .
சிறிது தொய்வு என்றால்..
எண்ண இயலவில்லை. .
என்ன விளையாட்டு. ???
சித்தர்கள் தலைவனாய்...
சித்துக்களின்
முதல்வனாய்...
எத்தனை உயிர்
காப்பாற்றி...
எத்தனை நோய் சீராக்கி....
பித்தங்களை நேராக்கி...
பிரிந்த குடும்பம்
ஒன்றாக்கி. ...
அளப்பரியா அற்புதங்கள். .
அனுதினமும் செய்திட்டு...
மகிழ்வித்த மகானே...
எங்கள்....