தேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்!
மருவூரார்!
தேவே..
உனக்கென்ன நீ
பரம்பொருள்!
உலகமே அழிந்தாலும் ..
உலகத்தை அழித்தாலும்..
படைப்பாய் புது பொருள்!
நான் சாதாரண மனிதன்..
சங்கடத்தால் அழுவேன்!
நீ..
கொடுக்க கொடுக்க..
கேட்பது எங்கள் நிலை!
அடுத்து அடுத்து
தொடர்கிறதே சூழ்நிலை!
வயதுதோறும் மாறிவருதே
தொல்லைகள்!
மனிதனாக பிறந்ததினால்
இல்லை எல்லைகள்!
கேட்டது பல..
விட்டது பல..
அனைத்தையும் சேர்த்து
தீர்த்தாய் எதைசொல?
இறக்கும்வரை ஏதாவது
வேண்டியே.. மனம்..
ஏங்குகிறதே...
உருகுதடி நெஞ்சே
மறுபடி மறுபடி ஜனனம் - இந்த மானிட வாழ்வில் சலனம்
அம்மா உந்தன் அங்கம் விதி மாற்றிட மண்ணதில் உருளும்
எதை நினைத்ததோ உனது நெஞ்சம் ...
தரையில் வேகமாக தேகம் உருண்டதே
பதை பதைத்ததே எனது நெஞ்சம்
அருமைத்தாயின்...
மருவத்தூர் மகானே!
மருவூரார்!
மருவத்தூர் மகானே!
உனை காணாமல்
என்னால் இருக்க
முடியவில்லை!
உனை எண்ணாது
நெஞ்சு துடிக்க
முடிவதில்லை!
உன்னிடம் வந்த..
ஒவ்வொரு நொடியும்..
உன்னதமான
நினைவலையில்
ஒவ்வொரு நாளும்
விடியும்!
மவுனத்தில்
இருந்தாலும்
மகத்தான நாடகம்..என
மறுபடிதானே புரியும்!
அவரவர்க்கு தகுந்த
ஆன்மீக பாதையை..
அள்ளி தந்தாயே..
அனுபவம்தானே
அறியும்!
எந்த கோயிலில் ...
எங்கு சென்றாலும். .
உந்தன் பெயரையே..
சொல்லி வணங்குவதே
எந்தன் மனதினில்
பதியும்!
பாசமே... கிடைக்காத
பரிதவித்த நெஞ்சுக்கு..
பாசத்தை
ஊட்டி விட்டாய்!
இரும்பினை...