எத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…!
மருவூரார்!
எத்தனை வழிகள். .
கொடுத்தாய் இறைவா...!
எங்களை பார்த்து. ...
எதாவது நிலையில். .
வருவாய் மனிதா..
எது தகுமோ
எடுத்துக்கொள்
என்றனை எளிதா....!
மந்திரம் படிக்கலாம். ..
மனம் நிறை தொண்டில்
துதிக்கலாம்!
முடியா நிலையில். ..
மந்திர ஒலி...ஒலிக்கலாம். .
செவிக்கெலாம்...
சேவிக்கலாம். ..
வேள்வியில் கலக்கலாம். .
உருள்வலம் உருளலாம்...
அமைதியா எண்ணி..
தியானத்தில்...
சொல்ல முடியுமா?
மருவூரார்!
சொல்ல முடியுமா?
வெளியில்..
சொல்ல முடியுமா?
சொல்லமுடியா
துயரங்களை
சொல்லாமலே
தீர்த்தநிலையை!
மானம்போகும்
என்றநிலையை
மாற்றிமகிழ்வு
தந்தமதியை!
உன்னிடம்வந்து
சொன்னாலும்
உன்பெயரை
சொன்னாலும்
மனமுருகி நின்றார்க்கு
மழைபொழியும்
தன்னாலே!
எத்தனையோ
செய்துவிட்டாய்
எதை சொல்வது?
அத்தனையும்
சொல்லிஎழுத
இடம் உள்ளதா?
குருவாக நீவந்த
பெருமை சொல்லவா?
கொற்றவனே..நீசெய்த
மகிமை கொஞ்சமா?
மருவத்தூர்
வந்தபின்தான்
மாற்றம் வந்தது!
மற்றவர்கள்
கேலி எல்லாம்
ஆட்டம் கண்டது!
சொல்ல முடியுமா?
உலகில்..
சொல்ல முடியுமா?
உனை
நம்பாத கூட்டத்தில்
நானிதை
சொல்ல முடியுமா? ?
......சபா ஸ்ரீமுஷ்ணம்
மருவூரார்!
எதிலும் மனம்
லயிக்கவில்லை..
இதயம் வலி..
பொறுக்கவில்லை...
உண்ண முடியவில்லை..
உறங்க முடியவில்லை..
உனக்கு உடல்நிலையில். .
சிறிது தொய்வு என்றால்..
எண்ண இயலவில்லை. .
என்ன விளையாட்டு. ???
சித்தர்கள் தலைவனாய்...
சித்துக்களின்
முதல்வனாய்...
எத்தனை உயிர்
காப்பாற்றி...
எத்தனை நோய் சீராக்கி....
பித்தங்களை நேராக்கி...
பிரிந்த குடும்பம்
ஒன்றாக்கி. ...
அளப்பரியா அற்புதங்கள். .
அனுதினமும் செய்திட்டு...
மகிழ்வித்த மகானே...
எங்கள்....
திருபாதம் தருவாயே
இறந்தாலும் , இருந்தாலும்..!!
பிறந்தாலும் , மறந்தாலும்..!!
துறந்தாலும், சிறந்தாலும்...!!
நிறைந்தாலும்,
உறைந்தாலும்...!!
திறந்தாலும் ,மறைந்தாலும்..!!
மலர்ந்தாலும்,
உலர்ந்தாலும்...!!
#இறையான_மறையோனை
#இனி_யானும்
#பிரியேனே....!!
குருவான பகவானே....!!
நிறைவான திருமாலே...!!
குருவான யுகவானே....!!
பெருஞான பெரியோனே...!!
" பிறைஞான பெருமானே"...!!
"பிழையாவும் "
"பொறுப்பாயே...!!
#திருஞான_மலரோனே...!!
#திருபாதம்_தருவாயே...!!
????????????
...சபா ஸ்ரீமுஷ்ணம். ...