amma நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் வேள்வி தீயில் அம்மனின் உருவம் தெரிந்து உள்ளது.

இங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் ஆதிபராசக்தி பீடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருஷாபிஷேக விழா நடந்தது. இதற்காக கோவிலில் வேள்வி யாகம் நடந்தது. இதற்காக யாக குண்டத்தில் பல்வேறு பொருட்கள் போடப்பட்டு எரிக்கப்பட்டன.

அப்போது மந்திரங்கள் உச்சரிக்க வேள்வியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதை ஏராளமான பக்தர்கள் கூடி நின்று தரிசனம் செய்தனர். திடீரென ஒரு பக்தர் வேள்வி தீயில் அம்மன் உருவம் தெரிந்ததாக கூறினார்.

சிறிது நேரத்தில் பலருக்கும் இந்த காட்சி தெரிந்ததாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சில பக்தர்கள் வேள்வி தீயை காமிராக்களில் பதிவு செய்தனர். அந்த காட்சிகள் நேற்று வெளியானது.

அதிலும், தீ ஜுவாலைக்குள் அம்மன் ஆசி வழங்குவது போல காட்சி தெரிந்தது. இந்த தகவல் நாகர்கோவில் முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது. ஏராளமான பக்தர்கள் அந்த காட்சியை காண கோவிலுக்கு விரைந்தனர்.

கோவிலில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை கண்டு பெண்களில் சிலர் பரவசம் அடைந்தனர்.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here