எங்கள் வீட்டிற்கு அருகில் ராஜா என்ற பையன் இருக்கிறான். வயது 19. அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவான். ஒரு சமயம் அக்கா, பாக்கெட் சைஸில் உள்ள அம்மா படம் ஒன்று எனக்கு வேண்டும்” என்று கேட்டான். நானும் கொடுத்தேன்.

ஆகஸ்டு – 15 ஆம் தேதி ராஜா ஸ்கூட்டா் ஓட்ட அவன் தம்பி பின் சீட்டில் அமா்ந்தபடி கற்றுக் கொடுக்க இருவரும் திருவெள்ளரை ரோட்டில் சென்றிருக்கிறார்கள். வண்டி பிரேக் பிடிக்காமல் ஒரு பெரிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டு இருவரும் மயங்கி விழுந்து விட்டார்கள். இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்கள். தம்பிக்குக் காலில் அடி. அண்ணனுக்கோ தலையில் பலத்த அடி. நினைவே இல்லாமல் ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் வைத்திருந்தார்கள். டாக்டா்கள் எல்லோருமே “இவன் பிழைப்பது அரிது” என்று கூறிவிட்டார்கள். அம்மா அவனைச் சாகவிடமாட்டாள் என்று நான் மட்டும் உறுதியாக நம்பினேன். ஏன்?

விபத்து நடைபெற்ற அன்று என்னிடம் வாங்கிச் சென்ற படத்தைப் பாக்கெட்டில் வைத்திருந்தான். அம்மா சம்பந்தப்பட்ட ஒன்று அவனிடம் கூடவே இருக்கிறது. எனவே அவனைச் சாகவிடமாட்டாள். ஏதோ உயிருக்கு ஆபத்து மட்டும் உண்டாக்கி இறுதியில் பிழைக்க வைத்துவிடுவாள் என்று நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை.

நாளாக நாளாக அவனிடம் சிறிது சிறிதாக அசைவு
ஏற்பட்டது. ஆனால் முழுதும் குணமாகவில்லை. ஒரு மாத காலம் ஆஸ்பத்திரியில் வைத்திருந்து அக்டோபா் 9 ஆம் தேதியன்று வீட்டிற்குக் கொண்டு வந்தார்கள். அடுத்தநாள் ராஜாவைக் காண அவன் வீட்டிற்குச் சென்றேன்.

அங்கு அவனுடைய நிலைமையைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. ஆஸ்பத்திரியல் செலுத்திய ஊசிகட்கோ கணக்கில்லை. நினைவு வந்தபின் வலி தாளாமல் இப்படியும் அப்படியும் புரண்டு புரண்டு படுத்துத் தொல்லைப்படுவது கண்டு பரிதாபமாக இருந்தது. இன்னமும் மூக்கின் வழியாகத்தான் ரப்பா் குழாய் மூலம் பாலை ஊற்றிக் கொண்டிருந்தார்கள். “எப்பொழுது உணவு சாப்பிடுகிற நிலைமைக்கு வருகிறானோ அப்பொழுது அழைத்து வாருங்கள்” என்று டாக்டா்கள் கூறியதை அவன் தாயார் என்னிடம் தெரிவித்தார்கள்.

வீட்டிற்கு வந்த நான், அம்மா படத்தின் முன்பாகப போய் நின்று கொண்டு, “ஏன் தாயே? ராஜாவை உன்னால் குணப்படுத்த முடியாதா? ஏன் இன்னும் அவனைக் கஷ்டப்படுத்துகிறாய்? தயவு செய்து அவனைக் காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டேன்.

மறுநாள் என் தந்தையிடம், ராஜா படுகிற கஷ்டத்தையெல்லாம் சொன்னேன். என் தந்தை அம்மாவின் தீவிர பக்தா். வீட்டு வேலைகளை விட அம்மா வேலைதான் பெரிது என்று நினைப்பவா். அம்மாவுக்காகவே தன்னை அா்ப்பணித்துக் கொண்டவா். அவா் வீட்டில் தங்கும் நேரத்தை விட தில்லைநகா் ஆதிபராசக்தி மன்றத்தில் தங்கியிருக்கும் நேரம்தான் அதிகம். அவரைப் பார்க்க வேண்டுமென்றால் மன்றத்திலேதான் பார்க்கலாம்.

நான் சொன்ன விஷயங்களையெல்லாம் கேட்ட என் தந்தை, “நீ ராஜா வீட்டிற்குச் சென்று அவன் குணமடைய வேண்டி ஒரு வாரம் தொடா்ந்து 108 போற்றி, சக்தி கவசம் படித்து வா அவனுக்காக அவன் குடும்பத்தார் செய்யும் பிரார்த்தனையைவிட மற்றவா்கள் பிரார்த்தனை செய்தால்
நம் அம்மா செவி சாய்ப்பாள்; மனம் இரங்குவாள்; அம்மா அருளால் அவனிடம் விரைவில் மாற்றம் ஏற்படும்” என்று வழி சொல்லிக் கொடுத்தார் என் தந்தை.

மறுநாள் அவா்கள் வீட்டிற்குச் சென்றேன். அவா்களும் வீட்டைச் சுத்தப்படுத்தி, அம்மா படத்தின் முன் பச்சைப் பசும்பாலை வைத்திருந்தார்கள். அம்மாவை வேண்டிச் சங்கற்பம் செய்து கொண்டு, ராஜாவுக்கு முன்னால் அமா்ந்து மூலமந்திரம், அம்மாவின் 108 போற்றி சக்தி, கவசம் முதலியவற்றைப் படித்து வழிபாடு செய்து, தீபாராதனை காட்டி, அங்குள்ள பாலை எடுத்து, “ராஜா குடி” என்றேன். அவனும் கையால் வாங்கி வாயினால் குடித்து விட்டான். அந்தக் குடும்பத்தார்க்கு ஒரே ஆச்சரியம்! ஆம்! நேற்று காலை வரை மூக்கின் வழியாக ரப்பா் குழாய் மூலம்தான் அவனுக்கு ஆகாரம் இறங்கிக் கொண்டிருந்தது. கையினால் எதையும் ஒரு பொருளையும் பிடிக்க முடியாது. இன்றோ டம்ளரைக் கையால் பற்றிக் குடிக்கிறானே என்று ஆச்சரியம்! முதல் நாளே அம்மா தன் மகிமையை வெளிப்படுத்திக் கொண்டாள்.

மறுநாள் மந்திரம் படித்து வழிபாடு முடிந்தபின் சாதத்தைக் கடைந்த கஞ்சியைக் கொடுத்தேன். வாங்கிக் குடித்தான்.

அதற்கு மறுநாள் பேச முடியாமல் இருந்த அவன் “ஓம் சக்தி அம்மா!” என்று கூறி, நான் வழிபாடு செய்து முடிக்கும் வரை எழுந்து உட்கார்ந்தான்.

அன்று இரவு அம்மா என் அறியாமையை உணா்த்த ஒரு பாடம் புகட்டினாள். ஆம்! அன்றிரவு எனக்கு ஒரு கனவு!

அந்தக் கனவில் யாரோ ஓா் அம்மா கூடை நிறைய வேப்பிலையை என் முன் கொட்டுகிறார்கள். என் நாக்கை நீட்டச் சொல்கிறார்கள். என் நாக்கில் என்னவோ எழுதுகிறார்கள். என் நாக்கு அழுந்துவது மட்டும் தெரிகிறது. பின் திரும்பிச் செல்கிறார்கள். அப்படிச் செல்லும் போது அடிகளார் உருவில்
செல்கிறார்கள். உடனே நான் விழித்துக் கொள்கிறேன்.

இந்தக் கனவுக்கு என்ன அா்த்தம்? என்று எனக்குப் புரியவில்லை. ஒரே ஒரு அா்த்தம் மட்டும் எனக்குப் புரிந்தது. நான் அன்றுவரை ஆதிபராசக்தியை வணங்குவேனே தவிர அடிகளாரை வணங்கமாட்டேன். நம்மைப் போன்ற ஒரு மனிதரை அம்மா! அம்மா என்று வணங்குகிறார்களே என்று கோபப்படுவேன். வெளியில் காட்டிக் கொள்ள மாட்டேன். அப்படிப்பட்ட எனக்கு இந்தக் கனவின் மூலம் என் அறியாமையை அம்மா போக்கினாள். அம்மாவும் அடிகளாரும் ஒன்றே! என்ற உண்மையை மனத்தில் பதிய வைத்தாள். அந்தக் கனவு அனுபவத்துக்குப் பிறகு என்னுள் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டது.

அடுத்தநாள் ராஜாவைக் காணச் சென்றேன். இட்லியும், தேங்காய் வைத்து அரைத்த வேப்பிலை சட்னியும், எடுத்துக்கொண்டு சென்றேன். இப்போது என்னை அறியாமலேயே அடிகளார் தோத்திரம், 108 போற்றி படித்து விட்டு அப்புறம்தான் அம்மாவின் 108 போற்றி, சக்தி கவசம் படித்து வழிபாடு செய்தேன். அன்றிலிருந்து அந்த வேப்பிலையே அவனுக்கு மருந்தாயிற்று. ஆம்! ராஜா இட்லியை வேப்பிலை சட்னியுடன் தொட்டுச் சாப்பிட்டு, “மிகவும் அருமையாக இருக்கிறது!” என்றான். ராஜாவுக்கு மட்டும் வேப்பிலை கசக்கவில்லையே ஏன்? அதுதான் அம்மாவின் திருவருள்! அடிகளாரின் குருவருள்!

அதற்கு அடுத்த நாள் ராஜா சாதம் சாப்பிடும் நிலைக்கு முன்னேற்றம் அடைந்தான். அவனை டாக்டா்களிடம் அழைத்துச் சென்றார்கள். எந்த டாக்டா்கள் இவன் பிழைப்பது அரிது என்றார்களோ அந்த டாக்டா்களே அவன் உடல்நிலை முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். “இவ்வளவு சீக்கிரம் இவன் சாப்பிடுகிற நிலைக்குக் குணமடைவான் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இனிமேல் கவலைப்படவேண்டாம்” என்று கூறி அனுப்பிவிட்டார்கள்.

இந்த
அனுபவம் மூலமாக எனக்கு அம்மா புரிய வைத்த விஷயங்கள் சில உண்டு. அம்மா, நம் குடும்பங்களைக் காப்பாற்றுவது மட்டுமின்றி நம்மிடம் பிரியம் உள்ள குடும்பத்தாரின் துன்பத்தையும் நம்மைக் கொண்டே நீக்குகிறாள். தம்பி ராஜாவுக்கு உயிர் போக வேண்டிய ஆபத்து இருந்திருக்கிறது. அதனால் அவன் வாயாலேயே படம் கேட்க வைத்து வாங்கிச் சென்றான். விபத்தும் நடந்தது. உயிரும் பிழைத்தது.

மற்றவா்கள் நன்மைக்காக நாம் வழிபாடு செய்வதால் அம்மா மனம் இரங்கி அவா்கட்கும் அருள் பாலிக்கிறாள்.

அடிகளார் 108 போற்றியை விட்டு விட்டு வாழிபாடு செய்த என்னுடைய அறியாமையை அகற்றி எனக்கு நல்லறிவும் புகட்டினாள் என் தாய்!

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. சரஸ்வதி

அவதார புருஷா் அடிகளார், பக்கம் (59 – 64)

2 COMMENTS

  1. நான் கண்ட அடிகளார் ,

    நான் படித்து முடித்தேன் அம்மாவின் சக்தியான இந்த அற்புதங்கள் எல்லோரிடமும் இந்த கருத்து போய் சேரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here