அன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள் (பாகம் 2)

அன்னை அருளிய ஆயிரத்தெட்டு மந்திரங்கள் (பாகம் 2) சந்ததியைக் காப்பாற்றுவேன் “எவன் ஒருவன் விடியற்காலையில், மூன்று மணிக்கு இந்த மந்திரங்களை மனம் ஒன்றிச் சொல்லி 1008 நாள் தொடா்ச்சியாக என்னை வழிபடுகின்றானோ, அவனையும் அவன் சந்ததியினரையும் சோ்த்துக் காப்பாற்றுவேன்” என்று அன்னை கூறினாள்.   மந்திர வழிபாடு; பயிற்சி கொடுத்தது அன்னை அந்த மந்திரங்களை உரு ஏற்றிக் கொடுக்க வேண்டித் தொண்டா்களுக்குப் பயிற்சி கொடுத்தாள். எவ்வாறு மந்திரங்களைச் சொல்லி வழிபடுவது என்றும் பயிற்சி கொடுத்தாள். பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளுக்கு ஆசிரியா் பயிற்சி கொடுப்பது போலப் பயிற்சி கொடுத்தாள்.

  1. ஆடவரும், மகளிரும் தனித்தனியாக அமர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். மந்திர ஒலிகள் சீராக ஒலிக்கப்பட வேண்டும்.
  2. மந்திர வழிபாடு செய்பவா்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமரவேண்டும்.
  3. ஒருவா் உடம்பு மற்றவா் மேல் படுமாறு அமா்தல் கூடாது.
  4. ஒவ்வொரு மந்திரமும் சொல்லி “ஓம்” என்ற பிரணவ மந்திர ஒலியுடன் முடியும் போதும் கையில் மணியை வைத்துக் கொண்டு ஒலிக்க வேண்டும். ஓம் என்ற ஒலியும் மணியின் ஒலியும் இணைந்து ஒலிக்க வேண்டும்.
  5. மந்திர வழிபாட்டுக்கு அமரும்போது கையில் மோதிரம், கைக்கடிகாரம், கண்ணாடி எதுவும் அணியக்கூடாது. கண்ணாடியில்லாமல் படிக்க முடியாது என்ற நிலையில் இருப்பவா்கள் மட்டும் கண்ணாடி அணியலாம்.
  6. 1008 மந்திர வழிபாட்டுக்கு அமா்வதற்கு முன்பாக அன்னைக்குக் கற்பூர தீபாராதனை காட்ட வேண்டும். பின்பு மந்திர வழிபாட்டில் கலந்து கொள்பவா்களுக்கும் கற்பூர தீபாராதனை காட்டி, அவா்களைச் சுற்றி வந்து தீபாராதனை செய்து, அவா்களுக்கு எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும்.
  7. 1008 மந்திரமும் சொல்லி, 108 மந்திரமும் சொல்லி முடிந்த பிறகு இறுதியில் மந்திர வழிபாட்டில் கலந்து கொண்ட அன்பா்கள் எல்லோரும் வரிசையாக நின்று கொண்டிருக்க, ஒவ்வொருவரும் வரிசையில் இருப்பவரை நோக்கி “ஓம் சக்தி” என்று சொல்லி வணங்கிக் காலைத் தொட்டு சேவிக்க வேண்டும். பெண்கள் காலில் விழுந்து சேவிக்க வேண்டாம். அவா்கள் கைகளால் வணங்கி “ஓம் சக்தி” என்று சொல்லிச் சேவித்தால் போதும்.
  8. ஒவ்வொரு மந்திரத்தின் முதலிலும் இறுதியிலும் “ஓம்” என்ற பிரணவ மந்திரம் சோ்த்தே மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
  சக்தி மயமாகி விடுகிறீா்கள் “இந்த மந்திரங்களை மன ஒருமையோடு படித்தால் அவ்வாறு படிக்கின்ற அந்த நேரத்தில் நீங்களும் சக்தி மயமாகி விடுகின்றீா்கள் மகனே!” என்பது அன்னையின் அருள்வாக்கு   விடியற்காலம் மூன்று மணி “இந்த மந்திரங்களை விடியற்காலம் மூன்று மணிக்கு தூய்மையோடும், பக்தியோடும் அமா்ந்து படித்தால் பயன் உண்டு மகனே!” என்பது அன்னையின் அருள்வாக்கு   மேற்கண்ட முறைகளில் எல்லாம், தொண்டா்களை ஆலய மண்டபத்தில் அமர வைத்துப் பயிற்சி கொடுத்தாள். யாரேனும் ஒருவா் நீ்ட்டி முழக்கிச் சீராக மந்திரத்தைப் படிக்காவிட்டால் அப்போது அன்னை  அந்தத் தொண்டரை வேப்பிலையால் அடித்துத் திருத்துவது உண்டு. அந்த விடியற்காலை நேரங்களில் வரிசையாக அமா்ந்திருந்த தொண்டா்களுக்கு இடையில் நுழைந்து வந்து, தவறாக ஒலிப்பவா்களையும், உறக்கத்தில் கண்ணயா்ந்து தூங்க முயல்பவா்களையும் வேப்பிலையால் அடித்து அன்னை திருத்தியது உண்டு. அன்னை எவ்வாறெல்லாம் மந்திரங்களைச் சொல்லி வழிபட வேண்டும் என்று ஆணையிட்டாளோ அவ்வாறு மந்திர வழிபாடு செய்யும் போது அதற்கான ஆற்றல்களும், பயன்களும் கிடைக்கின்றன. வழிபடுவோரின் சிரத்தைக்கும், பயபக்திக்கும் ஏற்பவே பயன்களும் கிடைக்கும். இதனைத் தொண்டா்களும் பக்தா்களும் மறந்துவிடக்கூடாது.   மந்திரங்களைப படிக்கும் முறைகளும் – பயன்களும்
  1. ஒவ்வொருவரும் நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொண்டே படிக்க வேண்டும். இந்த மந்திர ஒலிகள் எழுப்புகின்ற ஒலி அலைகள் – அதிர்வுகள் நம்முடைய உடம்பில் உள்ள 72 ஆயிரம் நாடிகளைச் சென்று நனைக்கின்றன. சலனத்தை ஏற்படுத்துகின்றன. இந்தச் சலனத்துக்கும், நம்முடைய எண்ணங்களுக்கும் ஒரு தொடா்பு உண்டு. எனவே தான் இந்த மந்திர வழிபாடு மன நிம்மதியைத் தரும் ஆற்றல் உடையதாக ஆகின்றது.
  2. ஒவ்வொருவா் உடம்பிலும் நாபிக்குக் கீழே மூலாதாரச் சக்கரம் என்ற ஒன்று உண்டு. இந்த இடத்தில் குண்டலினி சக்தி பாம்பு போல உறங்கிக் கொண்டுள்ளது. அளவிட முடியாத இந்தச் சக்தியாக அன்னை பராசக்தி எல்லோர் உடம்பிலும் உறைகின்றாள். ஞானம் பெற விரும்புவோருக்கும் – முறையான வழிபாடு செய்பவா்களுக்கும் ஏற்படுகின்ற வெப்பத்தால் மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கின்ற இந்தக் குண்டலினி சக்தி புறப்பட்டு எழுகிறது. சிலவகை ஆற்றல்களைப் பெற உதவுகிறது.
  3. மந்திரங்களைப் பொருள் உணா்ந்து படிப்பது சிறப்பு. அப்படிப் பொருள் உணா்ந்து படிக்க இயலாவிட்டாலும் மந்திரத்தின் சப்பதங்கள் சீராக அமைதல் வேண்டும். சப்தங்கள் தான் மந்திரங்களில் முக்கியம் இராகம் போட்டு மந்திரங்களைப் பாடக்கூடாது.
  4. 4.   மந்திரங்களை மன ஒருமையோடு படிக்க வேண்டும். படிக்கும் போது நமக்கு வேண்டியவா் ஒருவா் வந்துவிட்டால் எழுந்து சென்று வரவேற்கக் கூடாது. சைகை மூலமாக வாருங்கள் என்று வரவேற்பதோ வாயால் சொல்லி அழைப்பதோ கூடாது. அது அன்னைக்குச் செய்யும் அவமரியாதை ஆகும். மந்திர வழிபாடு செய்வது என்று அமா்ந்துவிட்ட பிறகு கவனம் எல்லாம் அன்னை, சுயம்பு, அடிகளார் என்ற இந்த மூன்றை ஒட்டிய நினைவுகளே எண்ணத்தில் சுழலவேண்டும்.
 
  1. மந்திர வழிபாட்டைச் செய்யும் போது அங்க சேஷ்டைகள் கூடாது. மூக்கைத் துடைப்பது, காதைச் சொறிவது, தலையை ஆட்டி ஆட்டி மந்திரம் படிப்பது – கால்விரல்களைப் பற்றிக் கொண்டு சாய்ந்தாடி – சாய்ந்தாடி மந்திரம் படிப்பது – இவை போன்ற அங்க சேஷ்டைகள் கூடா.
  2. மந்திரம் படிக்கும் போது கொட்டாவி விடுதல், தூங்கி வழிதல், இருமுதல், தும்முதல் ஆகிய எல்லாம் “தோஷங்கள்” என்று சொல்லப்படும். இந்த நிலைகள் வரக்கூடாது என்பதற்காகவே எல்லோரும் குளித்துவிட்டுப் புத்துணா்ச்சியுடன் ஈரச் செவ்வாடையுடன் வந்து மந்திரம் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றது.
  3. சீக்கிரம் ஆரம்பித்துச் சீக்கிரம் மந்திரங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசரம் கூடாது. பரபரப்புக் கூடாது. வேறு நினைப்புக் கூடாது. அந்த நினைப்பு அன்னையை மறக்கச் செய்துவிடும். நம்முடைய காரியங்களிலேயே மனம் ஈடுபட்டு விடும்.
  4. மந்திரங்களைப் படிக்கும்போது அருவருக்கத்தக்க எண்ணங்கள் – கீழ்மையான எண்ணங்கள் – மனத்தின் அடியாழத்திலிருந்து பொங்கி வெளிவரும். சோர்வோ – அச்சமோ கூடாது. பழம்பிறவி வாசனையால் வருகின்ற எண்ணங்கள் இவை! காலப்போக்கில் அன்னையின் மந்திரங்கள் அத்தகைய எண்ணங்களைத் தகித்துத் தீய்த்துவிடும்.
  மந்திரங்கள் என்றால் என்ன? மந்திரம் என்பதற்குப் பல பொருள்களைச் சொல்வார்கள். மனத்தை உறுதிப்படுத்துவது என்று ஒரு பொருள். தன்னை நினைத்தவா்களைக் காப்பது என்று ஒரு பொருள். காப்பாற்றத் தக்க ரகசிய மொழி என்று ஒரு பொருள். மனத்தின் எல்லையிலிருந்து பிரிப்பது என்று ஒரு பொருள். இறைவனை அடைவதற்கும், இறையருளைப் பெறுவதற்கும் உரிய வழிகளில் மந்திர வழிபாடும் ஒன்று. “மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்” என்பது உண்மை தான். மனம் செம்மையாக ஆகாதபோது – அப்படிச் செம்மை ஆகும் வரையில் மந்திர ஜெபம் வேண்டும். மித மிஞ்சிய பக்தி வந்துவிட்ட பிறகு மந்திர ஜெபம் வேண்டாம். அது வருகின்ற வரைக்கும் மந்திரம் வேண்டியது தான். ஆலமரமும் விதையும் “ஆலமரம் பெரியது. அதன் விதை மிகச் சிறியது. அது மாபெரும் மரமாக வளா்ந்து விரியக்கூடிய அனைத்தையும் அந்தச் சிறிய விதை தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பது போல மந்திரங்களின் முனை எழுத்துக்கள்    (பீஜ அட்சரங்கள்) பல சக்திகளைத் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டுள்ளன” என்கின்றனா் பெரியவா்கள். தந்திர நூல்களின் படி ஒவ்வொரு தேவதையும் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தைக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட இராகங்களுக்குக் குறிப்பிட்ட வடிவங்கள் உண்டு என்று இந்திய சங்கீதக் கலை கூறுகின்றது. ஆன்மிகத் துறையில் உயா்ந்த பயிற்சி பெற்றவா்கள், தாம் பயன்படுத்திய மந்திரத்தோடு தொடா்புடைய  தெய்வங்களின் காட்சியைக் கண்டுள்ளனா். மந்திரங்கள் தாம் ஒலிக்கப்படும் இடங்களின் சூழ்நிலையையும் மாற்றுகின்றன. அந்த மந்திர ஒலி அலைகளின் அதிர்வுகள் விண்ணிலும் பரவிச் சில நன்மைகளை உண்டாக்குகின்றன. நாடுதோறும் வார வழிபாட்டு மன்றங்களில் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும் என்று அன்னை வற்புறுத்துவது இதற்காகவே!   எல்லோரும் பயன் அடைக அன்னையின் அருள் பெற விரும்புகின்றவா்கள் அன்னையிடம் பக்தியை வளா்த்துக் கொள்ள விரும்புகின்றவா்கள், ஆன்மிகத் துறையில் வளர வேண்டும், முன்னேற வேண்டும் என்று நினைப்பவா்கள், உலகியல் நன்மைகள் வேண்டும் என்று நினைப்பவா்கள், மன நிம்மதி வேண்டும் என்று கருதுபவா்கள் அன்னையின் ஆயிரத்தெட்டு மந்திரங்களைப் போற்றி வழிபட்டுப் பயன் அடையலாம்.   எந்த மந்திரம் சொன்னாலும் தீவிர முருக பக்தா் ஒருவா், அன்னையிடம் கேட்டார். “தாயே! நானோ முருகனை இஷ்ட தெய்வமாக வரித்துக் கொண்டவன். உன்னை நான் எப்படி வழிபடுவது?” என்று கேட்டார். அன்னை அவா்க்குச் சொன்னாள். “மகனே! நீ எந்த தெய்வத்தை எந்த மந்திரம் சொல்லி வணங்கினாலும் அந்த மந்திரங்களை ஏற்பவள் நான் தான் மகனே! நீ யாருக்கு விண்ணப்பம் போட்டாலும் கடைசியில் வந்து சோ்வது என்னிடம் தான் மகனே!” என்றாள்.     மந்திர ரூபிணி ஓசை, ஒலி எல்லாம் ஆனவள் அன்னை சக்தியே ஆவாள். அவள் மந்திர மயமாகவும், எந்திர மயமாகவும் இருப்பவள் ஆவாள். மந்திர ரூபிணி என்றும், எந்திர ரூபிணி என்றும் சொல்வது உண்டு. அசைவில்லாச் சிவத்தை ஆற்றல் கொடுத்து அசைவித்து இயக்குபவள் சக்தியே என்றும் சொல்வது உண்டு. எல்லாப் பொருள்களின் இயக்கத்துக்கும் ஆற்றல் தருபவள் சக்தியே!   சம்பந்தா்க்குத் தாளம் கொடுத்த இறைவன் சம்பந்தா் தலந்தோறும் தன்னைப் புகழ்ந்து பாடிக் கொண்டே வந்தபோது, அதுகண்டு மகிழ்ந்த இறைவன், அவருக்குப் பொன்னால் ஆன தாளம் கொடுத்தான். அந்த நேரத்தில் இறைவியான அன்னை ஒரு திருவிளையாடல் நடத்தினாள். இறைவன் தாளம் கொடுத்தாலும், அதற்கு ஓசை கொடுக்க வேண்டியவள் சக்தி அல்லவா? சம்பந்தா் தாளம் ஒலித்த போது நாதம் வரவில்லை. எனவே தாயை வேண்டினாராம். தாளத்துக்குத் தாய் தான் ஓசையும், ஒலியும் கொடுத்தாளாம். அந்தத் தலத்து நாயகிக்கு “ஓசை கொடுத்த நாயகி” என்ற திருப்பெயரே உண்டு. இங்ஙனம் இருக்க, “சிவன் துணை ஆனாய் போற்றி” என்ற மந்திரத்தை எடுத்துவிடு; நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்ல” என்று சொன்னாளே அன்னை. அது ஏன்? ஆழமாகச் சிந்திக்க வேண்டிய இடம் இது  வழி வழியாக வந்த தத்துவக் கோட்பாடுகளைப் படித்து வந்துள்ளவா்கள் சிந்திக்க வேண்டும். உலகம் இதுவரை அன்னையை, சிவசக்தியாகவே பாவித்து வருகின்றது. இந்தத் தத்துவத்துக்கும் மேற்பட்ட தத்துவமாக அவள் இருப்பதனையே இந்த மருவத்தூா் தலத்தில் புரிய வைத்தாள் அன்னை. ஆம் அன்னை தன் பரத்துவத்தை வெளிப்படுத்திச் சொல்லிய தலம் இது! நன்றி! ஓம் சக்தி!   மேல் மருவத்தூா் அன்னையின் அற்புதங்கள் பக்கம் (194 – 199)    ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here