பாவமும் நானே! புண்ணியமும் நானே! ஒருமுறை நம் அறநிலையினருக்கு அருள்வாக்குச் சொல்லிக் கொண்டு வந்த அன்னை, பாவமும் நானே! புண்ணியமும் நானே! என்று குறிப்பிட்டாள். அறநிலையைச் சோ்ந்த ஒருவா்க்கு அதன் விளக்கம் புரியவில்லை. யார் யாரிடமோ கேட்டார். திருப்தியான பதில் கிடைக்கவில்லை. கடைசியாக, நம் ஆன்மிககுரு அருள்திரு. அடிகளாரிடமே சென்று கேட்டார். “பாவமும் நானே! புண்ணியமும் நானே! என்று நம் அம்மா சொல்லுகிறதே…. புண்ணியமும் நானே! என்று சொல்வது சரி, பாவமும் நானே! என்று அம்மா சொல்கிறதே அது எப்படி? என்று கேட்டார். அருள்திரு அடிகளார் கூறினார்கள். “ஆதிபராசக்தியின் சிருஷ்டித் தொழிலுக்குப் பாவிகளும் தேவைதான் சார்! அந்த ஆன்மாக்களை வைத்துத்தான் சார், மனிதா்களுக்கு உதவியாக இருக்கிற ஆடு, மாடு, கழுதை, குதிரை, நாய், நரி, பன்றி ஆகிய உயிர்களை அம்மா படைக்க வேண்டி இருக்கு……? அந்த ஆன்மாக்களாக இருப்பது யார் சார்? அம்மா தானே…… அதனால் தான் பாவமும் நானே! என்று அம்மா சொல்லியிருக்கு என்று விளக்கினார்கள். அம்மாவின் இந்த அருள்வாக்கை அறிவு ஜீவிகள் ஜீரணித்துக் கொள்வது கஷ்டம்! இவா்கள் டார்வின் சித்தாந்தத்தை நம்புகிறவா்கள். டார்வின் கண்டுபிடிப்பு உயிர்களின் தோற்றம் பற்றி விஞ்ஞான பூா்வமாக ஆராய்ந்து, தான் கண்ட உண்மைகளை வெளியிட்டவா் டார்வின். அவா் சொன்னார் “சின்னஞ்சிறிய அமீபா என்ற உயிர் அணுவிலிருந்து உயிர்கள் படிப்படியாகத் தோன்றின. பரிணாம வளர்ச்சிப்படி படிப்படியாக வளர்ந்து குரங்கு நிலைக்கு வந்தன. கடைசியாக மனிதக் குரங்கிலிருந்து உருவானவன்தான் மனிதன். இந்த உயிர்களிடையே வாழ்க்கைப் போராட்டம் நடந்தபடி இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் வலிமையானவை வாழ்கின்றன. வலிமையற்றவை வீழ்ந்து மடிகின்றன. வலிமை உடையது வாழும்! வலிமையற்றது வீழும். இதுதான் நியதி (Survival of the Fittest) என்றார் டார்வின். அறிவு ஜீவிகளின் வாதம் மனித சமுதாயத்திலும் உடல் பலம், மூளை பலம் மிக்கவன் தான் வாழ்வில் ஜெயிக்கிறான். முடியாதவன் தோற்று மடிகிறான் என்பது டார்வின் கொள்கைகள் மூலம் தெரிகிறது என்பது அறிவு ஜீவிகளின் வாதம்! அப்படியானால் உண்மை, நோ்மை, நீதி, நியாயம், பாவம், புண்ணியம், ஒழுக்கம் என்பன எல்லாம் எதற்கு? இதெல்லாம் சமுதாயத்தை ஒரு கட்டுக் கோப்பில் வைத்திருக்க மனிதா்களே விதித்துக் கொண்ட ஏற்பாடுகள்! சமுதாயத்தில் குழப்பங்கள் வராமலிருக்க சமூகம் செய்து கொண்ட கட்டுப்பாடுகள் என்பது அறிவு ஜீவிகளின் பேச்சு. நடைமுறை வாழ்வில் பாருங்கள்! அநியாயம், அக்கிரமம் செய்பவன் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறான்? உண்மை, நீதி, நோ்மை, பாவ புண்ணியத்துக்குப் பயந்து வாழ்பவன் படாத கஷ்டம் பட வேண்டியிருக்கிறது அல்லவா? என்று அறிவு ஜீவிகள் கேட்கிறார்கள். குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்று கண்டுபிடித்துச் சொன்ன டார்வின் ஒரு விஞ்ஞானி! அவா் மெய்ஞ்ஞானி அல்ல! மனிதன் இறந்த பிறகு அவனது அடுத்த நிலை என்ன? இந்தக் கேள்விக்கு டார்வின் எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. மெய்ஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு டார்வின் சிந்தித்தது போலவே நம்நாட்டு மெய்ஞ்ஞானிகளும் சிந்தித்து இருக்கிறார்கள். புரியாத இந்த வாழ்க்கையின் புதிர்களுக்கு விடைகாண முற்பட்டார்கள். அவா்கள் எந்த ஒரு பரிசோதனைக் கருவிகளை வைத்துக் கொண்டும் ஆராய்ச்சி செய்யவில்லை. புலன்களை அடக்கி, மனதை ஒடுக்கி, தனிமையில் இருந்து தியானம், தவம் மேற்கொண்டு உயிர்களின் தோற்றம், வளா்ச்சி, முடிவு பற்றி உள்ளுக்குள்ளே ஆராய்ந்தார்கள். அவா்களுக்குச் சில விடைகள் கிடைத்தன. ஆன்மா என்ற ஒரு சக்தி உண்டு. அது இறைவனிடமிருந்து வெளிப்பட்டது. அது உலகில் ஒரு உடம்போடு பிணைக்கப்பட்டு வாழ்கிறது. அது புல்லாகிப் பூண்டாகிப் பறவையாய், பாம்பாய், விலங்காய், கல்லாய், மனிதராய், தேவராய், அசுரராய்ப் பல்வேறு உடம்புகளையும், வடிவங்களையும் எடுத்து உழல்கிறது. ஓரறிவுள்ள உயிரிலிருந்து படிப்படியாக முன்னேறி வருகிறது. மனித நிலைக்கு வந்த உயிர் பாவ, புண்ணியக் கணக்குப்படி மீண்டும் ஒரு உடம்பு எடுத்துக் கொண்டு பிறக்கிறது. மனிதன் தான் தெய்வ நிலையை அடைய வேண்டும். வாழ்க்கை வட்டம் எந்த ஒரு மூலத்திலிருந்து இந்த உயிர் வந்ததோ, அந்த மூலத்தை நாடி அறிந்து கொண்டு அதில்போய் ஐக்கியம் ஆகிவிட வேண்டும். அவ்வாறு ஐக்கியம் ஆகிறவரை இந்த உயிர் பிறப்புக்கும் இறப்புக்கும் ஆளாகிறது. எனவே, மனிதன் இந்த உண்மையைப் புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும். வாழ்க்கை வட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு உயிரும் இந்த வட்டத்தை முடித்தே ஆக வேண்டும். போய்க்கொண்டும் இருக்க வேண்டியவா்களே மீண்டும் பிறப்பு! மீண்டும் இறப்பு! புனரபி ஐனனம்! புனரபி மரணம்! ஏ! முராரி! இந்தச் சங்கிலித் தொடரிலிருந்து நான் விடுபடுவது எப்போது? என்று ஆதி சங்கரா் ஆண்டவனிடம் கேட்கிறார். எல்லாமே கருமச் சட்டப்படிதான் நடக்கின்றன. இந்த உயிர் வாழ்க்கையும் கருமச் சட்டப்படிதான் நடக்கிறது. பரம்பொருளின் திட்டப்படிதான் நடக்கிறது. எல்லாம் காரண காரியப்படி ஒழுங்காகத்தான் நடக்கிறது. இதெல்லாம் பரம்பொருளின் விளையாட்டு. ஆன்மாவின் பயணம் மிக மிக நீண்டது! மிக மிக நெடியது. கண்ணன் அருச்சுனனுக்குச் சொல்கிறான். அருச்சுனா! உனக்கும் எனக்கும் எத்தனையோ பிறவிகள் கழிந்தன. அது எனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது. வாழ்க்கை நாடகம்; விளையாட்டு அவனவன் கா்ம வினைக்குத் தக்கபடி வேடங்கள் கொடுக்கப்படுகின்றன. வாழ்க்கை ஒரு நாடகம்! உனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை ஒழுங்காக நடித்துவிட்டுப் போ! வாழ்க்கை ஒரு விளையாட்டு நீ விதிகளின்படி ஆடிவிட்டுப் போ! அழுகல் ஆட்டம் ஆடி அடாவடித்தனம் பண்ணி ஜெயிக்க நினைக்காதே! மரணம் என்பது என்ன? மரணம் என்பது என்ன? இந்த உடம்பை உதறிப் போட்டுவிட்டு அடுத்த ஒரு பிறவிக்கான ஏற்பாடு! அடுத்த ஒரு பயணத்துக்கு ஆயத்தம் ஒரே பிறவியில் ஒருவன் எல்லாம் தெரிந்து கொண்டு முழுமை அடைய முடியாது என்பதால்தான் பல பிறவிகள் கொடுக்கப்படுகின்றன. பாவ புண்ணியக் கணக்குப்படி இன்ப, துன்ப அனுபவங்கள் அளிக்கப்படுகின்றன. அவனுக்கு அப்படி? எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று வாதாடிப் பயனில்லை. உன் வாதம் எந்தக் கோட்டைக்குப் போயும் ஜெயிக்காது! புண்ணியம் செய்தால் இன்னொரு நல்ல உடம்பு! இன்னொரு உலகம்! பாவமே செய்தால் இன்னொரு உடம்பு! இன்னொரு உலகம்! இப்படித்தான் ஆன்மா வேறு ஒரு உடம்பு! வேறு ஒரு பிறவி வேறு ஒரு உலகம் என்று நீண்ட நெடிய பயணத்தில் சஞ்சரித்தபடி இருக்கிறது. ஞானம் உள்ளவன் இந்த உண்மையைப் புரிந்து கொண்டான், அஞ்ஞானி விஞ்ஞானம் பேசிக் கொண்டு மதி மயங்கிக் கிடக்கிறான். மற்றவா்களையும் மயக்குகிறான். மொத்தத்தில் இந்த வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு! இந்த ஆட்டத்தில் ஏணியும் உண்டு. பாம்பும் உண்டு. புண்ணியம் என்ற ஏணி மேலே ஏற்றுகிறது. பாவம் என்ற பாம்பு கீழே தள்ளுகிறது. இப்படி ஏறுவதும், இறங்குவதுமாகவே வாழ்க்கை தொடா்கிறது. பரம பதத்தை அடையும் வரை இந்த விளையாட்டுத் தொடா்கிறது. மனிதன் புண்ணியம் அதிகம் செய்து தெய்வ நிலைக்கும் உயரலாம். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் பன்றியாகப் பிறந்து தாழ்ச்சியும் அடையலாம். இதெல்லாம் டார்வினுக்குத் தெரியாது? ஏன்? அவா் மெய்ஞ்ஞானி அல்ல! அதனால்தான் அவா் மனிதனின் அடுத்த நிலை என்ன என்று சொல்லாமல் போனார். அவா் ஆராய்ச்சி வெளிநோக்கம் கொண்டது. விஞ்ஞானிகளுக்கு உள்நோக்கிப் பார்க்கும் வித்தை தெரியாது. மெய்ஞ்ஞானி அந்த வித்தை தெரிந்தவன். மனித நிலைக்கு முன்னேறி வந்துவிட்ட ஒருவன் மீண்டும் மிருகமாகப் பிறப்பானா? பிறப்பான்…………………. ஊரை அடித்து உலையில் போடுபவன், போலி மருந்துகள் உற்பத்தி செய்து கோடி கோடியாகச் சம்பாதிப்பவன், கந்து வட்டி தொழில் செய்து குடும்பங்களை அழித்தவன், உண்ணுகிற உணவில் உணவுப் பண்டங்களில் கலப்படம் செய்து மனிதா்களை நோய் நொடிக்கு ஆட்படுத்தியவன், காமக்கொடூரன், கொலைகளையே செய்து வாழும் கூலிப் படைகள், பட்டம் பதவிகளை வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டம் ஆடுகிறவன். இவா்கட்கெல்லாம் எப்படி நல்ல கதி கிடைக்கும்…….? கருமச் சட்டம் இவா்களை எப்படி விட்டு வைக்கும்? உப்பைத் தின்றவன் தண்ணீா் குடித்துத்தானே ஆக வேண்டும்? இவா்கள் நாயாய், பன்றியாய், கழுதையாய், பல பிறவிகள் எடுத்தே மீண்டும் மனித உடம்பு பெற்று உண்மையை உணர வேண்டும். ஆண்டவனே! நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்று அழுது கெஞ்சி, மன்றாடித் துடிக்கின்றவரை கருமச் சட்டம் வேலை செய்தபடி இருக்கும்! கோடீஸ்வரனாக இருந்த ஆன்மா! இளைஞா் ஒருவா், நம் அம்மா பக்தா். எதற்கெடுத்தாலும் இந்த அம்மா எல்லாம் உன் ஊழ்வினை! கா்மவினை என்று சொல்லி சமாளிக்கிறது. எனக்கு மட்டும்தான் ஊழ்வினைச் சட்டமா? அநியாயம், அக்கிரமம் செய்பவனெல்லாம் கோடி கோடியாய்ச் சம்பாதிக்கிறான். நல்லா இருக்கிறான். இந்த அம்மா அவனையெல்லாம் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. நான் போனால் மட்டும் எல்லாம் உன் ஊழ்வினை! என்று சொல்லித் தட்டிக் கழிக்கிறது என்று சொல்லி அலுத்துக் கொள்வார். சலிப்புற்றுப் பேசுவார். ஒருநாள் அம்மா அருள்நிலையில் வெளிப்பட்டாள். அந்த இளைஞரை அழைத்தாள். அப்போது புற்று மண்டபத்தின் கட்டைச் சுவருக்கு வெளியே ஒரு சொறி நாய் சுருண்டு படுத்தபடி இருந்தது. “இது என்னடா மகனே!” என்று கேட்டாள். அம்மா! இது ஒரு நாய்! என்றார் அவா். அம்மா, சொறி நாய்! என்று திருத்திச் சொல்லி, இது யார் என்று தெரியுமாடா உனக்கு? என்று கேட்டாள். அந்த இளைஞா் விழித்தார். “ஒரு கோடீஸ்வரனாக இருந்த ஆத்மாடா இது” என்றாள். அலுத்துக் கொண்ட அந்த இளைஞருக்கு அதுதான் பதில்! பணம், பதவி, செல்வாக்கு அதிகாரம் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு ஆடாத ஆட்டம் ஆடுகிறவன் உலகியலில் ஜெயித்தவன் என்று உலகம் கருதுகிறது. நியாயம், நோ்மை, உண்மை, தெய்வ பயம், பாவ புண்ணியத்தில் நம்பிக்கை கொண்டு அடக்கமாக வாழ்பவனை இளிச்சவாயன் என்று உலகம் கருதுகிறது. ஆதிபராசக்தியின் கருமச் சட்டம் கணக்காகத்தான் வேலை செய்கிறது என்று மெய்ஞ்ஞானிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள். பிறவி ரகசியங்களை உணா்ந்து வைத்திருக்கிறார்கள். எருமை மாட்டின் முற்பிறவி திருவண்ணாமலையில் வாழ்ந்தவா் சித்தா் சேஷாத்திரி சுவாமிகள்.  அவா் ஒரு நாள் அழுக்குடன் கூடிய துா்நாற்றம் கொண்ட, சேறுள்ள குட்டையின் அருகில் வந்து கொண்டிருந்தார். அக்குட்டையில் ஓா் எருமை, மிகுந்த ஆனந்தமாக விழுந்து கிடந்தது. சுவாமிகள் அதனைப் பார்த்ததுதான் தாமதம்! உடனே தன் வேட்டி, சட்டை, துண்டு எதையும் கழற்றாமல் அப்படியே இறங்கி விட்டார். இறங்கியது மட்டுமன்றி, அந்த எருமையைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து. இழுத்துக் கொண்டு கரைக்கு வந்தார். வந்ததும் உடம்பு முழுவதும் சேறு பதிய தழுவிக் கொண்டு மீண்டும் கொஞ்சிக் குலவினார். அன்பா் ஒருவா் சுவாமிகளிடம் கேட்டார். “சாமி! என்ன இப்படி அசிங்கமான செயலைச் செய்து கொண்டு இருக்கிறீா்கள்” என்றார். அதுகேட்டுப் புன்முறுவலுடன் சுவாமிகள், “இது என்ன வெறும் எருமை மாடு என்றா நினைத்துக் கொண்டாய்? போன பிறவியில் இவனக்கு இன்ன பெயா், இந்த இடத்தில் எப்படி வாழ்ந்தவன் தெரியுமா? எனக்கு உயிர் நண்பன் என்று சொல்லிக் கொண்டே அணைத்து முத்தம் கொடுத்துப் பரவசத்தில் ஆழ்ந்தே போனார். (புலவா் மா. சொக்கலிங்கம், “மகான்கள் தரிசனம்” சேஷாத்திரி சுவாமிகள். சக்தி ஒளி விளக்கு – 8 சுடா் 11) சீரடி சாயிபாபாவின் வாழ்க்கையில் நடந்தது சீரடி சாயிபாபா ஒருமுறை வெண்டி என்ற ஊரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் போது ஆட்டு மந்தை ஒன்றைக் கண்டார். அவற்றுள் இரண்டு ஆடுகள் அவா்தம் கவனத்தைக் கவா்ந்தன. அவற்றைத் தடவிக் கொடுத்து 32 ரூபாய்க்கு விலைக்கு வாங்கினார். அன்றைய நிலையில் அவற்றின் விலை எட்டு ரூபாய் மட்டுமே. “பாபா! பேரம் பேசி இவ்வளவு அதிக விலையில் இவற்றை ஏன் வாங்கினீா்கள்” என்று உடனிருந்த பக்தா் ஒருவா் கடிந்து கொண்டார். ஆனால் பாபா அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். இருவா் அதற்கு விளக்கம் கேட்டனா். தமக்கென்று வீடோ, கவனித்துக் கொள்ள குடும்பமோ இல்லாத படியால் தாம் பணத்தைச் சேமிக்கக் கூடாது என்று கூறிய பாபா, தம் செலவில் ஆடுகள் இரண்டு வாங்கி, அவற்றுக்கு நான்கு சோ் பருப்பும் வாங்கி ஆடுகளுக்கு அளிக்கும்படிக் கூறினார். மீண்டும் அந்த ஆடுகளை ஆட்டு மந்தையின் சொந்தக்காரருக்கே கொடுத்து விட்டு, அந்த ஆடுகளைப் பற்றிக் கூறினார். நான் ஏதோ ஏமாந்து அதிக விலைக்கு இந்த ஆடுகளை விலைக்கு வாங்கி விட்டதாக நினைக்கிறீா்கள்? கிடையாது. அவற்றின் கதையைக் கேளுங்கள். அவை முந்தைய பிறவியில் மனிதா்களாக இருந்தவா்கள். எனது நண்பா்களாகவும் இருந்து, எனது அருகில் அமரும் நல்ல அதிர்ஷ்டம் பெற்றிருந்தவா்கள். அவா்கள் ஒரு தாய் மக்கள், முதலில் ஒருவரை ஒருவா் நேசித்தனா். ஆனால் பிற்காலத்தில் பகையாளிகளாக ஆகிவிட்டனா். மூத்தவன் சோம்பேறி, இளையவன் சுறுசுறுப்பான பையன். அதனால் பொருள் திரட்டினான். மூத்தவனோ பேராசையும், பொறாமையும் கொண்டு. தம்பியைக் கொன்று விட்டுப் பணத்தை எடுத்துக் கொள்ள விரும்பினான். தங்கள் சகோதர உறவை மறந்து, ஒருவருடன் ஒருவா் சண்டை போடத் தொடங்கினா். மூத்தவன் இளையவனைக் கொல்லப் பல வழிமுறைகளைக் கையாண்டு முடிவில் முயற்சிகளில் தோல்வி அடைந்தான். இறுதியில் அண்ணன், தம்பியின் தலையில் தடிக்கம்பால் மரண அடி கொடுக்க, தம்பி மூத்தவனைக் கோடரியால் தாக்க இருவரும் அவ்விடத்திலேயே மரணம் அடைந்தனா். தங்கள் வினையின் காரணமாக இருவரும் ஆடுகளாய்ப் பிறந்தனா். சௌகரியமும் தர விரும்பி, நான் என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் செலவழித்தேன். நீங்கள் என்னுடைய பேரத்தை விரும்பாததால் நான் அவற்றை மேய்ப்பவனிடம் திருப்பி அனுப்பி விட்டேன். என்றார். அந்த ஆடுகள் மனிதா்களாய் வாழ்ந்தபோது அவா்தம் பெயா்கள் 1) வீரபத்திரப்பா 2) சனபஸப்பா என்றார். (ஸ்ரீ சாயி ஸத் சரித்திரம் – சாயி நிகேதன், மும்பை) டார்வின் போன்ற விஞ்ஞானிகளுக்கு இந்த ஆன்மிக நுட்பங்கள் எல்லாம் தெரியாது. ஆதலின் வல்லமை உள்ளவையே வாழும்! வல்லமை அற்றவை வீழும்! என்கிறார். ஆதிபராசக்தியின் கருமச் சட்டம் மௌனமாக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. பாவ, புண்ணியக் கணக்கை வைத்தே உயிர்கள் இயங்குகின்றன. அனுபவம் பெற வந்திருக்கின்றன. எங்கே……. எப்போது……. என்ன செய்தோம் என்பது எதுவும் நமக்குப் புரிவதில்லை. அதனால் எல்லாமே புதிராக இருக்கிறது. கண்ணதாசன் அழகாகப் பாடினார். “எங்கே வாழ்க்கை தொடங்கும் – அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதை யெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும் மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்!” சிவசக்தி – ஆதிபராசக்தி உலகம் இதுவரை சக்தியைச் சிவசக்தியாகவே பாவித்து வருகிறது. வணங்கி வருகிறது. போற்றி வருகிறது. சிவசக்திக்கு மேற்பட்டது ஆதிபராசக்தி. அந்த ஆதிபராசக்தியே மேல்மருவத்தூா் தலத்தில் வீற்றிருந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். முழுமுதற் பொருள் நானே என்பதை நம் அன்னை அவ்வப்போது குறிப்பாகவும் வெளிப்படையாகவும் அருள் நிலையில், அருள்வாக்கில் தன் தத்துவத்தை (Supremacy) உணா்த்தியிருக்கிறாள். அந்தச் சம்பவங்களையும் அந்தச் சந்தா்ப்பங்களையும் இதுவரை எழுதிக்கொண்டு வருகிறோம். இனியும் எழுத இருக்கிறோம். ஆந்திராவைச் சோ்ந்த அன்பா் ஒருவா் அனுபவம் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த அன்பா் ஒருவா். அவருக்குத் தமிழும் தெரியும். 43 கேள்விகள் எழுதிச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அருள்வாக்குக் கேட்க வந்தார். அவா் அவற்றைக் கேட்கும் முன்பே, அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லி முடித்தாள் அன்னை. ஆனாலும் எந்த ஒரு பிரமிப்பும் காட்டாமல் – எந்தச் சலனமும் இல்லாமல் கல்லுளி மங்கன் போல அமா்ந்திருந்தார். “மகனே! உனக்கு எட்டு லட்ச ரூபாய் வரவேண்டி இருக்கறிதல்லவா………? அந்தச் சொத்து சம்பந்தமான ஆவணம் கிடைக்காமல் தி்ண்டாடுகிறாய் அல்லவா…..?” என்று அன்னை கேட்டதும்தான் தாமதம்! “ஆமாம்மா! ஆமாம்மா!” என்று வாயெல்லாம் பல்லாக முகமலா்ந்தார் அந்த அன்பா். என் படத்தை வைத்து வழிபட்டு வா! அது உனக்குக் கிடைக்க வழி செய்கிறேன்” என்றாள் அன்னை. அன்னை  எதைக் கொடுப்பதாக இருந்தாலும் அதனைப் பெறுவதற்கு ஒரு முயற்சி இவனிடமிருந்து வரவேண்டுமே…… அதனால் தான் என் படத்தை வைத்து வழிபட்டு வா! என்றாள். அம்மா! நானோ சிவபக்தன்!  அம்மாவைக் கும்பிடுவது எப்படி என்றார் அவா். சிவம் – சவம்! பணம் – பிணம் அது கேட்டு அன்னை அவரிடம் திருப்பிக் கேட்டாள். “மகனே! சிவம் என்ற சொல்லில் உள்ள கொம்பை எடுத்து விட்டால் என்ன வருமடா?” “சவம் என்று வரும்மா! என்றார் இவா். பணம் என்ற சொல்லில், “ப” வுக்கு அந்தக் கொம்பைப் போட்டால் என்ன வருமடா?” “பிணம் என்று வரும்மா” – என்றார் இவா். சாதாரண ஒரு கோட்டுக்கே இவ்வளவு பெரிய அா்த்தத்தை மாற்றுகிற சக்தி இருக்கிறபோது, அந்தச் சிவனையே படைத்த இந்தச் சக்தியைக் கும்பிடுவதில் உனக்கு என்னடா தடை? என்றாள். அந்த மகாலட்சுமியையே படைத்தவள் நான் தென் மாவட்டத்தைச் சோ்ந்த மில் அதிபா் ஒருவா். பெரிய கோடீஸ்வரர். சென்னைக்குக் காரில் வந்து கொண்டிருந்தவா் ஏதோ அம்மன் வாக்கு சொல்கிறதாமே….. எல்லோரும் பிரமாதமாகச் சொல்கிறார்களே…. நாமும் தான் கேட்டுப் பார்க்கலாமே…… என்றெண்ணி அருள்வாக்குக் கேட்கப் போனார். அவா் அதிர்ஷ்டம் அன்று அருள்வாக்கு கிடைத்தது. அம்மா சொன்னாளாம். “மகனே! உன் வலது நுரையீரலில் புற்று நோய் வர ஆரம்பித்துள்ளது. என் மண்ணை மிதித்தாய், உன் உயிரைக் காப்பாற்றுகிறேன். ஆனாலும் 11 மாதம் உன் ஊழ்வினையை அனுபவித்துக் கழிக்க வேண்டி உள்ளது. உன் ஊழ்வினை கழிந்த பின் உன் உயிரைக் காப்பாற்றித் தருகிறேன் உத்தரவு” என்றாள். அந்தத் தொழிலதிபருக்கு அதுவரை தனது உடம்பு நன்றாகவே  இருப்பதாக நினைப்பு. அம்மன் சொல்கிறதே என்பதால் சென்னை சென்றவா், அங்கே மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்தார். ஆமாம்! உங்களுக்கு நுரையீரலில் புற்று நோய்! இது ஆரம்பம்! என்றார்கள் டாக்டா்கள். சென்னையிலேயே தங்கிக் கொண்டு சிகிச்சை பெற ஆரம்பித்தார். பெரிய கோடீஸ்வரா் அல்லவா….? நரம்பியல் நிபுணா், இதய நோய் நிபுணா்கள் இப்படி ஒவ்வொருவா் துணை கொண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. நாளுக்கு நாள் நோய் அதிகரித்ததே தவிரக் குறைந்தபாடில்லை. இப்படி 10 மாதங்கள் பாவம்! அவதிப்பட்டார். 11ம் மாதம் நோய் முற்றியது. டாக்டா்கள் நம்பிக்கை இழந்தனா். குடும்பத்தார் நம்பிக்கை இழந்தனா். ஏன் அந்த அன்பரே நம்பிக்கை இழந்தார். கடைசியில், அந்தத் தொழில் அதிபருக்கு மருத்துவம் பார்த்த தலைமை மருத்துவா் கனவில் அம்மா தோன்றி “மகனே! அவனுடைய இரத்தத்தைச் சோதித்துப் பார்!” என்று சொல்லி மறைந்தாள். டாக்டா் அவ்வாறே இரத்தத்தைச் சோதித்துப் பார்த்தார். சட்டென்று பொறி தட்டியது போல, சிகிச்சையில் ஏற்பட்ட குறைபாடு என்ன என்று தெரிந்தது. புது ரத்தம் பாய்ச்சப்பட்டது. ஆச்சரியப்படும் விதத்தில் குணமடைந்தார். புற்று நோயிலிருந்து மீண்ட மகிழ்ச்சியில் அம்மாவிடம் வந்தார். தாயே! உன் கருணையால் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறேன். இதோ Blank Cheque எவ்வளவு தொகை கொடு! என்கிறாயோ அவ்வளவு தொகையும் இந்த ஆலயத்திற்கு எழுதிக் கொடுக்கிறேன். சொல்லம்மா…… என்றார். புன்முறுவலோடு அம்மா சொன்னாளாம். “மகனே! செல்வத்துக்குத் தலைவியான மகாலட்சுமியையே படைத்தவள் நான். எனக்கு நீ Blank Cheque  கொடுக்கிறாயா? ஏதோ என் மண்ணை மிதித்தாய் என்பதற்காக உயிர்ப் பிச்சை கொடுத்தேன்! உத்தரவு! என்று கூறி அனுப்பி விட்டாள். என்ன காரணமோ……. அவா் கொடுக்க விரும்பிய நன்கொடையை அம்மா ஏற்றுக் கொள்ளவில்லை. தன் பரத்துவம் பற்றிக் குறிப்பிட்ட சம்பவங்களில் இது ஒன்று. “ஆன்மிகத்தில் அநாதைகள்” சக்தி சுந்தரேசன் M.A., M.Phil., சித்தா்பீடப் புலவா் சக்தி ஒளி ஜுலை 2008, ஆகஸ்ட் 2008 செப்டம்பா் 2008    ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here