ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை ஆதிபராசக்தி பகுதி 2

0
1449

ஆயுளை நீட்டிக் கொடுத்த அன்னை ஆதிபராசக்தி ஜாதகத்தில் சிக்கல்
கோவையில் ஹட்கோ காலணி என்ற இடத்தில் நம் மன்றம் ஒன்று சிறப்பாக இயங்கி வருகிறது. அதில் ஸ்ரீ ராம் என்ற அன்னையின் தொண்டா் ஒருவா் இருக்கிறார். அவரது சகலைக்கு (மனைவியின் தங்கையின் கணவா்) ஒரு பிரச்சினை. அவா். எம். எஸ். சி பட்டம் பெற்று மேல் நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணி புரிபவா். அவரது மகள் வயதுக்கு வந்த நேரம் அந்த நேரத்தின் காலம் நல்லது தானா? என்று பார்க்க ஒரு ஜோதிடரிடம் அந்த ஆசிரியா் சென்றார்.
பெண் வயதுக்கு வந்த குறிப்பைப் பார்த்துவிட்டு அந்த ஜோதிடர் பெண்ணின் தந்தையின் ஜாதகமும் கேட்டார். அதையும் கொடுத்தார் ஆசிரியா். ஆசிரியரின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு ஜோதிடா் வெகு நேரம் ஜோசித்தார். எப்படிச் சொல்வதென்று தயங்கினார். கடைசியில் சொன்னார்
“உங்கள் சாதகம் நன்றாய் இல்லை. 1987ல் பிப்ரவரி 16ம் திகதியன்று நீங்கள் நிச்சயமாக இறந்துவிடுவீா்கள். தப்பிக்க வாய்ப்பில்லை”
சாவு நிச்சயம்
அதை நம்பாமல் வேறு மிகத் தெரிந்த இரு ஜோதிடா்களிடம் காட்டினார்.
பிப்ரவரி 16ற்கு மேல் இந்த ஜாதகா்
உயிர் வாழ ஜாதகத்தில் வாய்ப்பே இல்லை என்று சொல்லி விட்டனா். இன்னும் ஒன்றரை மாதத்தில் சாவு நிச்சயம் என்றாகி விட்டது.
சாவை விடத் துன்பமானது
ஆசிரியா் மனம் கலங்கினார். வேலைக்கு நிம்மதியாகப் போய் வர முடியவில்லை. உள்ளத்தில் அச்சம் குடிகொண்டது.
இந்த நாளில் சாவு வரப்போகிறது
என்று தெரிவது சாவைக் காட்டிலும் துன்பமானது அல்லவா? செய்வதறியாது கலங்கினார். மனைவியையும் குழந்தைகளையும் மாமனார் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தன் சகலை சக்தி தொண்டா் ஸ்ரீராம் வீட்டில் தங்கினார்.
என் வீட்டுக்கு வா
ஒரு நாள் இரவு ஆசிரியரும் ஸ்ரீ ராமும், அவரது சிறு பெண்ணும் பக்கம்
படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். நடு இரவில் ஸ்ரீராமின் சிறு பெண்
எழுந்து அவரது முதுகிலே படார் படார் என்று அடித்து எழுப்பியது.திடுக்கிட்டு எழுந்து ஸ்ரீ ராம் படுக்கையில்
உட்கார்ந்தார். அவா் குழந்தை தூங்கிய நிலையில் “என் வீட்டுக்கு வா, என் வீட்டுக்கு வா” என்று உரக்கச் சொல்லி விட்டுப்படுத்துவிட்டது.
மேல்மருவத்தூா் அன்னை ஆதிபராசக்தியின் பெருங்கருணை
பொழுது விடிந்து சிறுமி எழுந்த பின் அவளைக் கூப்பிட்டு ஸ்ரீ ராம் “என்னம்மா ராத்திரி என்னை ஏன் எழுப்பினாய்?” என்று கேட்டார்.
“ நான் எழுப்பவில்லையே” என்றாள் மகள். “என் வீட்டுக்கு வா” என்று சொன்னாயே என்று கேட்டார். அப்படி நான் சொல்லவில்லையே என்றாள் அந்தச் சிறுமி. அந்தச் சிறுமி தந்தையை எழுப்பியதும் சொன்னதும் அந்தக் குழந்தைக்கு ஏதும் நினைவில்லை.
ஸ்ரீ ராமுக்கு விசயம் புரிந்து விட்டது. சாவை எதிர்நோக்கும் தன் சகலைக்கு மருவத்தூராள் உதவும் பெருங்கருணை தான் இது என்று. சக்தி பக்தரான அவருக்கு விளங்க வெகு நேரம் ஆகவில்லை.
டெலிபோன் செய்தி மா்மம்
ஸ்ரீ ராம் சகலையான அந்த ஆசிரியரும் அந்த இரவே மேல்மருவத்தூருக்குப் புறப்படுவதென முடிவு செய்தார்கள். அந்த நாள் 15.02.1987 அன்று இரவு 8.30 மணிக்கு கோவையிலிருந்து சென்னை புறப்படும் சேரன் பேரூந்தில் கண்டக்டா் இடம் இல்லை என்று சொல்லிவிட்டார். ஸ்ரீ ராம் சிறிது நேரம் யோசித்தார்.
பேரூந்தின் ஓட்டுனரிடம் சென்ற சார் “மேல்மருவத்தூருக்கு ஒரு நாலு பேர் அவசரமா போகணும்” என்று சொல்லும் போதே ஓட்டுனா் “ஓ! நீங்க தானா அது. வண்டியில உட்காருங்க சார்” என்று சொல்லிவிட்டு பின்னே கண்டக்டா்
பக்கம் திரும்பி “நஞ்சுண்டார் போன் பண்ணினார் மேல்மருவத்தூருக்கு நாலு திக்கற் வேணும் என்று அவங்க வந்திருக்காங்க ஏத்திக்கப்பா” என்றார். ஆனால் ஸ்ரீ ராமுக்கோ அந்த ஆசிரியருக்கோ நஞ்சுண்டான் என்று யாரையும் தெரியாது. யாரிடமும் சொல்லி போன் செய்யவுமில்லை.
ஸ்ரீ ராம், ஆசிரியா், அவா்களது மனைவி முதலிய நால்வரும் கோவையிலிருந்து மறுநாள் காலை மேல்மருவத்தூா் ஆலயத்தின் முன் வந்துஇறங்கினார்கள். அந்த நாள் தான் ஆசிரியா் நிச்சயம் இறந்து விடுவார் என்று ஜோதிடா் குறித்த 16.02.1987 ஆகும்.
பங்காருஅம்மா அவர்களின் கைப்பட்ட அதிஷ்டம்
நால்வரும் குளித்து கோயில் சுற்றி அன்னை ஆதிபராசக்தியை மனமுருக வேண்டினார்கள். அன்று காலை ஆன்மீக குரு அருள்திருபங்காரு அம்மா அவர்கள் கோயில் சுற்றிவிட்டு அதா்வன பத்திரகாளி கோவயிலுக்கு செல்ல வெளிவாசல் நோக்கி வருகிறார்கள் அப்போது அந்த ஆசிரியர் நான்குகால் மண்டபத்தின் மேல் ஒரு பக்கம் ஒதுங்கி பங்காரு
அம்மா அவர்கள்யே பார்த்துக்
கொண்டிருக்கிறார்.
பரம்பொருளான பங்காரு அம்மாஅவா்கள் நான்கு கால் மண்டபத்தில் நடந்து செல்லும் போது அவா்களது திருக்கரம் அந்த ஆசிரியரின் மணிக்கட்டில் உள்ள நாடியில் பட்டது. பங்காருஅம்மா அவா்களின் பார்வை ஆசிரியர் மீது பட்டது நாடியில் பட்ட அதிஸ்டத்தால் அந்த ஆசிரியா்
ஆயுளை நீட்டிக் கொடுத்தார்கள் பங்காருஅம்மா. 16.02.1987 அன்று இறந்துவிடுவார் என்ற அமைப்பை பரம்பொருளான பங்காருஅம்மா மாற்றிக்கொடுத்து அவரை வாழவைத்தார்கள்.
அன்னை ஆதிபராசக்தி
அருள் திரு பங்காருஅம்மா அவர்கள் மனித உருவில் வாழ்வதும் நம்மை
“சார்” போட்டு பேசுவதும் மனித நியதிச் செயல்கள். இதை வைத்துக் கொண்டு அவரை மனிதர் தான் என்று முடிவு செய்வதால் இம் முடிவு செய்தவர்களிற்கு தான் அது பேரிழப்பு.
பார்வையிலே நோயைத் தீர்த்தும், இறந்த ஒருவரை உயிர்ப்பித்ததும் நாடியை அழுத்தியதால் உயிரை நீடித்துக் கொடுத்ததும், அவதாரச் செயல்கள்.
பங்காருஅம்மா அவர்களின் கைப்பட்டு ஒரு மனிதனின் ஆயுள் நீண்டது. பங்காருஅம்மா அவர்கள் தான் அவதார அன்னை ஆதிபராசக்தி என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?
தொடரும்.