ஓம்சக்தி அம்மா அவர்களின் கோடிக்கணக்கான அடியார்களுள் நானும் ஒருத்தி என்பதின் அக மகிழ்கிறேன். அம்மாவின் சக்தி ஒளி மூலமாக அம்மா அவர்களை பற்றி கேள்விப் பட்டிருப்பினும் 2007ம் ஆண்டே எனக்கு அம்மாவினதும், கருவறைப்படம் வீடு வந்தது. மந்திரப் புத்தகம். அர்ச்சனைப் பிரசாதம் ஆகியனவும் கிடைத்தன. பெற்ற தாயின்றி இருளடைந்திருந்த என் வீடு அம்மாவின் வருகையின் பின் மெதுவாக ஒளி .
பெறத் தொடங்கியது. நீண்ட காலமாக இழுபறியிலிருந்த எனது திருமணப் பதிவு வைபவமும் 2008ல்நிறைவேறியது. எனது கணவரின் பட்டதாரிப்படிப்பும் இழுபறி நிலையிலிருக்க அதனைப் பூர்த்தியாக்குமாறு அம்மாவிடம் வேண்டி இங்குள்ள அல்வாய் சக்தி பீடத்தில் ஆடிப்பூரக் கஞ்சிக் கலயமேந்தினேன். அம்மா அதனை நிறைவேற்றி உரிய தொழிலிலும் அமர்ந்தினார்கள். தொடர்ந்து திருமணம் தடைப்பட்டது.

சங்குவேலியிலுள்ள அம்மாவின் வழிபாட்டிடத்துக்கு சென்று பெளர்ணமி பூஜை வழிபாட்டிலும்,அன்னதானத்திலும் கலந்து வழிபட்டு வந்தேன்.
2010ம் ஆண்டு அம்மாவின் அருளால் திருமணம் எதுவிதகுறையுமின்றி இனிதே நிறைவேறியது. திருமணமும் தமிழ் முறைப்படிபிராமணக்
குருக்களின்றி நடைபெறஇருந்தமையால் மனதின் ஒரு நெருடல். குரு வாரம் அன்று காலை திருமணம். திருமணத்தன்று காலை ஆன்மிககுருஅருள்திரு அம்மா அவர்கள் ஆசீர்வதிக்கும் திருப்படம் மணப் பரிசாக வந்து பூஜை அறையில் இருந்தது. இந்தியாவில் இருந்தே கூறைப் புடவையும், ஏனையவையும் வந்தன.

அனுப்பியோரும் அம்மாவின் அடியார்களே! அவர்கள் தாங்களாகவே கூறைப் புடவை வந்த பெட்டியுள் அம்மா அவர்களின் அருட்பிரசாதங்களை வைத்து அனுப்பியிருந்தனர். இதைவிட எனது திருமணத்துக்க வேறென்ன வேண்டும்? அம்மாவின் அருளால் நான் விரும்பியவரே வரதட்சணையின்றிக் கைப்பிடித்தார்.

எவ்வளவோ கஷ்டத்திலிருந்த எனக்கு அம்மா நான் எதிர்பாராத வகையில் எனது உறவுகள் நாம் கேளாமலேயே அள்ளித் தந்தனர். திருமணம் முடித்து ஓராண்டுக்கு மேலாகியும் மழலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட எனக்கு அது பற்றிய சிந்தனையில்லா
விடினும் நிர்ப்பந்தத்தின் பேரில் மருத்துவரிடம் செல்ல நேர்ந்ததது. பரிசோதித்த மருத்துவர் வயிற்றில் கட்டி காணப்படுவதாகவும், சந்திர சிகிச்சையின் பின்பே கருத்தரிக்க முடியுமெனவும் தெரிவித்து 2011ம் ஆண்டு சித்திரை மாதம் சத்திர சிகிச்சை எனவும் முடிவு செய்தனர். இறுதியாக மார்ச் மாதம் அம்மாவின் அவதாரத் திருநாள் நிகழ்வு சண்டிலிப்பாய் வழிபாட்டு மன்றத்தில் நடைபெற்றபோது கலந்து கொண்டேன்.

சித்திரை மாதம் கருத்தரிப்பது
என்று அம்மாபின் ஆணை போலும். பரிசோதனைக்காக மீண்டும் சென்ற போது 2-3 மாதம் கழித்தே
உறுதிப்படுத்துவேன்
என மருத்துவர் கூறினார்.

எல்லாம் அம்மா பார்க்கட்டும் என்று நானும் என் தொழிலுமாகக் காலம் கடந்து இப்போ நிறை மாதமாகிவிட்டது. மருத்துவர் உறுதிப்படுத்த முன் மனசில் ஒரே பயம். அவ்வேளை ஒரு கனவு, பரிசோதிக்கும் மருத்துவர் அம்மாவின் தீவிர பக்தர் தான் “நீ பயப்படாமல் போ யோசியாதை” என்று கூறினார்.

இடையில் வேறொரு மருத்துவரிடம் பரிசோதனைக்குச் சென்றபோது வயது முதிர்ந்த அனுபவமிக்க அவர், இது உங்களுக்கு கடவுளின் கொடை எனவும், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் பிந்தினால் பிள்ளைகளே கிடைப்பதரிது எனவும் கூறினார். ஏனெனில் கட்டிகள் உள்ளோர் கருத்தரிப்பது கடினமென்பது அவர் கருத்து. எல்லாம் அம்மாவின் அற்புதம். இன்னும் எஞ்சியுள்ள எமது பிரச்சினைகள் தீரவும் அம்மாவின் வாக்கின் படி நாம் நடக்கவும் அம்மாவின் அருள் வேண்டி நிற்கிறேன்.

ஓம் சக்தி!

திருமதி கார்த்திகா மயூரன்

யாழ்ப்பாணம், இலங்கை.