அம்மாவிடம் வந்து ஒட்டிக் கொள்!

அதனால்தான் மனம்பொறுக்காமல் என்னிடம் வந்துவிட்ட பிள்ளைகளை வைத்து உன்னை ஈர்க்க இதுபோன்ற செயல்களை உலகுக்குக் காட்டுகிறேன். ஒன்றைமட்டும் நெஞ்சில் பதித்துக் கொள்! எனது மேலான இருப்பை விட்டு – உனக்காக – உலக அழிவைத் தணிக்கும் பொருட்டு நானாக இறங்கி வந்திருக்கிறேன். இப்போது என்னை அலட்சியப் படுத்திவிட்டு அப்புறம் நான் ஓங்காரத்தில் ஒடுங்கிவிட்ட பிறகு நீ என்ன முயன்றாலும் இப்போது கிடைக்கிற வாய்ப்பு, அனுபவம் உனக்குக் கிடைக்காது! நான் அவனுக்கும் தாய்! உனக்கும் தாய்! உன்னுடைய வினை முடிச்சும் வினைப் பாரமும் என்னிடம் வர முடியாதபடித் தடைபடுத்துகின்றன. என் தொண்டர்களை வைத்துப் பாமர மக்களை வலிய வரவைத்து ஒரு பலனைக் கொடுத்து அனுப்பி வைக்கிறேன். ஆன்மிக ஜோதி, ஆன்மிகப் பயணம், ஆன்மிக மாநாடு, இருமுடி, அங்கவலம், வார வழிபாட்டு மன்றம் எல்லாமே… உன்னை என்னிடம் சேர்த்துக் கொள்ள வேண்டி உன் பொருட்டு நான் உருவாக்கிக் கொடுக்கும் சந்தர்ப்பங்கள். புத்தியோடு வந்து பிழைத்துக் கொள்! அம்மாவிடம் வந்து ஒட்டிக் கொள்! என் மடியில் வந்து விழுந்தபின் அடிப்பேன்; அணைப்பேன், என்னை விட்டு அகலக் கூடாது. அகங்காரமும், மண்டைக்கனமும் இல்லாதவரை இந்தத் தாயின் மடியில் நிரந்தரமாக இருக்கலாம். அவை தலைக்கேறி விட்டாலோ …. ஒன்று நான் உதறி விடுவேன்… இல்லையேல் நீ உதறி விழுந்து அப்பாலே கிடப்பாய். இதுவே ஆன்மிக உலகில் நான் ஏற்படுத்தியுள்ள எழுதப்படாத சட்டம்.

]]>