றேன்.

ஒவ்வொரு வருடமும் நம்பிக்கையோடு சென்றேன். காலம் கடந்து கொண்டே வந்தது. ஏன் எனக்கு மட்டும் சோதனையைக் கொடுக்கிறாய்! என்று அம்மாவிடம் கண்ணீர் மல்க வேண்டுவேன். அம்மா அருளால் என் கண்ணீருக்குப் பலன் கிடைத்தது. நான் கருவுற்றேன். கருவுற்ற காலத்தில் இரண்டாம் மாதத்தில் உதிரப் போக்கு ஏற்பட்டது. இது என்ன சோதனை? 10 வருடம் கழித்துக் கிடைத்த பாக்கியத்துக்கு மீண்டும் சோதனையா? என்று என் குடும்பத்தார் அனைவரும் கண்ணீர் விட்டனர். டாக்டரிடம் சென்று காட்டியபொழுது இது சாதாரண உதிரப் போக்குத் தான், கவலை வேண்டாம் என்றார்கள். ஆயினும் ஆறுமாதம் அவ்வப்பொழுது பட்டுக் கொண்டே இருந்தது. நான் மந்திரநூலை எடுத்து அம்மாவின் மந்திரங்களை அடிக்கடி படித்துக் கொண்டே இருந்தேன். ‘அம்மா! நீதான் எனக்குத் துணை’ என்று மன்றாடிக் கேட்பேன். பிரசவ காலம் நெருங்கியது. ஆபரேக்ஷன் செய்துதான் குழந்தையை எடுக்க வேண்டும் என்றார்கள். அம்மா அருளால் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இரண்டும் ஆண் குழந்தைகள்! நான் அடைந்த சந்தோக்ஷத்திற்கு அளவே இல்லை. சக்தி ஒளி ஜனவரி 2009
]]>