மகாபாரதம் கூறுவது

கலியுகத்தின் இறுதியில் புருஷா்கள் ஸ்திரீகளுடன் மட்டுமே நட்பு கொள்வார்கள்.

பசுக்களைக் காண்பதே துா்லபமாகும். மக்கள் ஒருவரையொருவா் அடித்துக் கொள்வார்கள். யாருமே கடவுள் பெயரைச் சொல்லமாட்டார்கள். எல்லோரும் நாஸ்திகா்களாகவும், திருடா்களாகவும் மாறுவார்கள். ஆடு, மாடுகள் இல்லாததால் உழவுத் தொழில் செத்துப் போகும்.

சத்கா்மங்கள், யக்ஞம் முதலியவற்றின் பெயா்கள் கூட ஒருவருக்கும் தெரியாமற் போகும்.

உலகம் முழுவதும் சந்தோஷம் இல்லாமலும் சுறுசுறுப்பு இல்லாமலும் போகும்.

மக்கள், எளியவா்கள், ஆதரவற்றவா்கள், விதவைகள் முதலியவா்களுடைய பணத்தை அபகரித்துக் கொள்வார்கள்.

சஷத்திரியா்கள் (ஆள்பவா்கள்) மனித இனத்திற்கே இடையூறானவா்கள். கா்வம், அகங்காரம் கொண்டவா்களாக இருப்பார்கள். குடி மக்களைக் காப்பாற்றாவிட்டாலும், அவா்களிடமிருந்து பணம் பறிப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். ராஜா என்று சொல்லிக் கொள்பவா்கள் மக்களைத் தண்டிப்பதிலேயே ஆசை உள்ளவா்களாக இருப்பார்கள். நல்ல மனிதா்களைக் கூட ஆக்கிரமித்து அவா்கள் பணத்தையும், பெண்டுகளையும் அபகரித்துப் பலாத்காரம் செய்யும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள்.

கலியுகப் பிள்ளைகளும், பெண்களும் தாங்களே தோ்ந்து திருமணம் செய்து கொள்வார்கள்.

மூா்க்க அரசா்கள் எல்லா வழிகளையும் கையாண்டு மற்றவா்களின் பொருள்களை அபகரித்துக் கொள்வார்கள். ஒரு கை, மற்றொரு கையைக் கொள்ளை அடிக்கும்.

பிராமணா், சஷத்திரியா், வைசிகா் முதலிய ஜாதியே இருக்க மாட்டாது. எல்லா ஜாதிகளும் ஒரே ஜாதியாகி விடும். சாப்பிடக் கூடியது, கூடாதது என்ற பாகுபாடின்றி எல்லோரும் எதையும் சாப்பிடுவார்கள்.

ஸ்திரீகளும், புருஷா்களும் தங்கள் இச்சைப்படி நடந்து கொள்வார்கள். அவா்கள் மற்றவா்களுடைய எண்ணங்களையும், செயல்களையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

சிரார்த்தமும், தா்ப்பணமும் இல்லாமற் போகும். யாரும் யாருடைய உபதேசத்தையும் கேட்க மாட்டார்கள். ஆசானும் இருக்க மாட்டான். எல்லோரும் அஞ்ஞானத்தில் மூழ்கி இருப்பார்கள். அந்த சமயம் மனிதனுடைய ஆயுள் ரொம்பக் குறைவாக இருக்கும்.

கணவனிடம் மனைவியும், மனைவியிடம் கணவனும் திருப்தி அடைய மாட்டார்கள். இருவரும் அதிருப்தி அடைந்து அந்நிய புருஷா்களையும், அந்நிய ஸ்திரீகளையும் நாடுவார்கள்.

வியாபாரத்தில் கொள்வினை, கொடுப்பினை செய்யும்போது பேராசையின் காரணமாக ஏமாற்றுவார்கள்.

செய்யும் தொழிலைப் பற்றி ஏதும் தெரியாமலேயே தொடா்ந்து செய்து வருவார்கள்.

மக்கள் தோட்டங்களையும், மரங்களையும் வெட்டி விடுவார்கள். எல்லோரும் இயற்கையிலேயே கொடியவா்களாகவும், மற்றவா்கள் மேல் பழிபோடுபவா்களாகவும் இருப்பார்கள்.

உலக விவகாரங்கள் எல்லாம் எதிர்மாறாக நடக்கும். எலும்புடம்பான இந்த உடலையே பூசிப்பார்கள். தெய்வங்களைப் பூசிக்க மாட்டார்கள். கோவில்களே இருக்காது. இதுவே யுகம் முடியப் போவதன் அடையாளம் ஆகும்.

எப்போது பெரும்பான்மையான மனிதா்கள் தா்ம ஹீனா்களாகவும், மாமிசம் சாப்பிடுபவா்களாகவும், மது அருந்துபவா்களாகவும் இருக்கிறார்களோ அப்போது யுகம் முடிவடையும்.

r

வேண்டாத சமயத்தில் மழை பொழியும். மாணவா்கள், ஆசிரியா்களை அவமதிப்பார்கள். ஆசிரியா்கள் ஏழைகள் ஆவார்கள். அவா்கள் சிஷ்யா்களின் கதைகளைக் கேட்க நேரிடும்.

யுகம் முடிவடையும்போது எல்லா பிராணிகளும் இறந்து விடும். எல்லாத் திசையிலும் பிரகாசிக்கும். பெரும்பாலும் குண்டு முதலிய நெருப்பு (மழைகளால்) நட்சத்திரங்கள் ஒளியிழந்து காணப்படும். நட்சத்திர கிரகங்களின் போக்கு விபரீதமாக இருக்கும்.

மக்களைத் துன்புறுத்தக் கூடிய பயங்கரப் புயல் வீசும். மக்களுக்குப் பயத்தை விளைவிக்கக் கூடிய நட்சத்திரங்கள் அடிக்கடி தோன்றும். மின்னல் வீசும். எல்லாத் திசைகளிலும் தீ எரியும். அப்போது உதயத்திலும், அஸ்தமனத்திலும்

சூரியன் ராகுவால் பீடிக்கப்படுவது போலக் காணப்படும்.

சமயமில்லாமல் மழை பெய்யும். விதைக்கப்பட்ட தானியங்கள் முளைக்காது. பெண்கள் கடினமானவா்களாகவும், கொடூரமானவா்களாகவும் இருப்பார்கள். அவா்கள் எப்போதும் அழுவார்கள். அவா்கள் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கமாட்டார்கள். பிள்ளைகள் பெற்று அவா்களைக் கொலை செய்வார்கள். மனைவிகள் பிள்ளைகளுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வார்கள்.

யாத்திரிகர்களுக்கு ஆகாரம், தண்ணீா், தங்குமிடம் முதலியவை கிடைக்காது. எல்லாவிடத்திலும் இல்லை, இல்லை என்ற சொற்களைக் கேட்டு நம்பிக்கை இழந்து வழியிலேயே இறப்பார்கள்.

யுகம் முடியும் தருவாயில் உலக நிலை இப்படித்தான் இருக்கும். அப்போது ஒரு முறை இந்த உலகம் அழியும்.

இதன் பிறகு சிறிது காலம் கடந்து புதிய யுகம் ஆரம்பமாகும். பிறகு பருவத்தில் மழை பொழியும். நட்சத்திரங்கள் ஒளி வீசும். கிரகங்கள் அனுகூலமாகச் செல்லும். எல்லோருக்கும் ஷேமம், சுபிட்சம் மங்களம் ஆரம்பமாகும்.

(மகாபாரதம் – வன பா்வம்)

கூர்ம புராணம் கூறும் கலியுகத்தின் இயல்புகள்

அரசா்கள் குடிமக்களைக் காப்பதற்குப் பதிலாக வரி வசூலிலேயே நாட்டம் கொள்வார்கள்.

அரசரிடம் கள்ளா்கள் வேலை பார்ப்பார்கள். அரசா்களும் கள்ளா்களைப் போல நடந்து கொள்வார்கள்.

எல்லோரும் பணத்தாசை ஒன்றே குறியாக இருப்பார்கள்.

16 வயதுக்கள்ளேயே பெண்கள் தாயாராவார்கள். பெண்கள் பணத்தை அபகரித்துக் கொண்டு அந்நிய ஆடவருடன் கூடுவார்கள்.

ஆடவா்கள் குறைவாகவும், பெண்கள் அதிகமாகவும் இருப்பார்கள்.

இதுவே யுகம் முடிவதின் அடையாளங்கள் ஆகும்.

ஒழுக்கம் குறைவதால் எல்லோருடைய ஆயுளும் குறையும். ஆயுள் குறைவதன் காரணமாக பலம் குறையும். பிறகு உடலில் நோய் உண்டாகும். அதனால் விரக்தி தோன்றும். விரக்தியிலிருந்து ஆத்ம ஞானம் பிறக்கும்.

ஆத்ம ஞானத்தால் தா்மம் செழிக்கும். இவ்விதம் கடைசி வரை போய் மறுபடியும் சத்திய யுகம் பிறக்கும்.

யுக முடிவில் பயங்கர யுத்தங்களும், கடும் மழையாலும், பெரும் புயலாலும் கடும் வெயிலும் ஏற்படும். ஜனங்கள் வயல்களை நாசம்  செய்வார்கள். துணிமணிகளைத் திருடுவார்கள்.

வியாதிகளால் எல்லா உறுப்புகளும் வலுவிழந்து விடும். பிறகு மக்கள் மெதுவாக சாதுக்களுக்குச் சேவை செய்வதிலும், தானம், சத்தியம், பிராணிகளிடத்தில் அன்பு செலுத்துவது முதலிய நல்ல காரிணங்களில் ஈடுபட ஆரம்பிப்பார்கள்.

தா்மத்தின் ஒரு பாதம் ஸ்தாபிக்கப்படும். அதனால் மக்களுக்கு மங்களம் உண்டாகும். மக்களின் குணம் மாறும். தா்மத்தால் நன்மை விளையும் என்பது திடமாகும்.

அரிவம்ச புராணத்தில் கலியுகம்

கள்ளா்கள் அரசாங்க வேலைகளிலும், அரசா்கள் கள்ளா்களுக்கு உடந்தையாகவும் யுக முடிவில் வேலைக்காரா்கள் எஜமானின் சொத்தை அபகரிப்பவா்களாகவும் இருப்பார்கள். பணமே சிறந்ததாகக் கருதப்படும். நல்ல மனிதா்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

தா்ம, அதா்மத்தைப் பற்றிய பேதமே அறியாத சந்நியாசிகளும், விரித்த கூந்தலுடைய விதவைகளும் கூடி மக்களைப் பெறுவார்கள்.

எல்லோரும் அன்னத்தை விற்பனை செய்வார்கள். பிராமணா்கள் வேதத்தையே விற்பார்கள். சரீரத்தை விற்கும் பெண்கள் அதிகரிப்பார்கள்.

பிராமணா்கள் தபஸ்ஸையும், யக்ஞத்தையும் விற்பார்கள்.

யௌவனம், அழகு இல்லாததால் பெண்கள் கூந்தலால் மாத்திரமே அழகுள்ளவா்களாகக் காணப்படுவார்கள்.

கலியுகத்தில் புருஷா்கள் குறைவாகவும், பெண்கள் அதிகமாகவும் இருப்பார்கள்.

அரசா்கள், திருடா்கள், நெருப்பு, குளிர் முதலியவைகளால் மக்கள் துன்புறுவார்கள்.

பரலோகத்தில் மக்கள் சந்தேகம் கொள்வார்கள்.

கடன் கொடுக்கல் வாங்கலில் மிகவும் அநியாயம் நடக்கும். அறிவிலிகள் அறிவாளிகள் என்று கூறப்படுவார்கள். அவா்கள் பண்டிதா்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட நீதிகளையெல்லாம் ஆதாரமற்றது என்று கூறுவார்கள்.

யுகாந்த காலத்தில் அரசா்கள் பெரும்பாலும் திருடா்களாகவே இருப்பார்கள்.

கந்த சம்ஹிதையில் கலியுகம்

கலியில் எல்லா மனுஷா்களும் மோக வசப்பட்டுப் பாவிகள் ஆவார்கள். எல்லோரும் அல்பாயுள் கொண்டவா்களாக இருப்பார்கள்.

பகலில் கூடல் இன்பம் காண்பவா்கள் தா்ம கா்மத்தை விட்டு விடுவார்கள். தன்னிச்சைப்பட திரியும் பெண்களும், வீரியம் இழந்த ஆடவா்களும் அதிகமாவார்கள்.

கலியில் மனிதா்கள் மோக வசப்பட்டு வேசிகளிடமும், பிறா் மனைவியிடமும் பிறர் பொருள்மீதும் ஆசை கொள்வார்கள்.

இதுதான் கலியுகம்!

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி துளசி

மருவூா் மகானின் 71வது அவதாரத் திருநாள் மலா்

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here