கொண்டது.பார்வை நிலைக்குத்திக்கொண்டது.மலஜலம் வெளியேறிவிட்டது.நானே சொன்னேன்ல.அவர தாங்கிப்பிடி என்று கூறியவாறு வீட்டினுள் அம்மா சென்று விட்டார்கள்.

நன்றாக உரையாடிக் கொண்டிருந்தவர் தற்போது தங்கள் கண்முன்னால் பிணமாகிவிட்டதை பார்த்த மற்ற இருவரும் வெலவெலத்துப் போய் இருந்தனர்.இவரின் மனைவி மன்றத்திலே பம்பரமாக சுழன்று இருமுடி பணிகளை செய்து கொண்டிருக்க,இவரோ இங்கு பிணமாகிவிட்டார்.அவருக்கு என்ன பதில் சொல்வது என்று மனங்கலங்கி சிந்தித்துக்கொண்டிருந்தனர்.வீட்டினுள் சென்ற அம்மா ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்து,உன்னை அவ்வளவு சீக்கிரம் போக விடமாட்டேன் என்று முகத்தில் நீரால் பளார் என்று அடித்தார்கள். பிணமானவர் உயிர் பிழைத்து எழுந்தார்.உங்களுக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்ததற்கு,நான் பேசிக்கொண்டு இருந்தது மட்டுமே ஞாபகத்தில் உள்ளது.பிறகு உடலில் இருந்து ஏதோ பிரிவது போல இருந்தது.கண்விழிக்கும்போது அம்மா அதர்வணபத்திரகாளியாக கையில் வேப்பிலையோடு காட்சி அளித்ததாகக் கூறினார்.
]]>