என்னிடம் வந்தும் ஏமாந்து போகாதே!

ன் மூலம் பரவிச் செடியாக முளைக்கின்றது. அவற்றுடன் காளான்களும் முளைக்கின்றன. நாளடைவில் அந்தக் காளான்கள் அழிந்து அந்தச் செடிகளுக்கே உரமாக அமைகின்றன.*

*அந்தச் செடி நாளடைவில் வளர்ந்து, மரமாகி, பூ பூத்து, காய் காய்த்து, கனி கொடுக்கும் காலத்தில் அந்தக் கனியைத் தின்பதற்கும் பறவைகள் தங்களுக்குள. சண்டையிட்டுக் கொள்கின்றன. இந்தச் சண்டையால் அப்பறவைகள், அப்பழத்தை தின்ன முடியாமல் தவற விட்டு விடுகின்றன. அந்த வேளையில் மரத்தினடியில் இருக்கும் அமைதியான நொண்டிப்பறவை கீழே விழுந்த பழத்தை உண்டு மகிழ்கின்றது.* *அதுபோல நான் ஆன்மிகம் என்ற விதையைத் விதைத்திருக்கிறேன்.* *அது செடியாகி வளர்கிற காலத்தில் பல எதிர்ப்புகள் தோன்றும். அந்த எதிர்ப்புக் காளான்களே ஆன்மிகம் என்ற மரத்திற்கு உரமாக அமையும். இந்த மரத்திலிருந்து பூ பூத்து, காய் காய்த்து கனியாகும் காலத்தில் உங்களுக்குள் சண்டை சச்சரவு போட்டுக் கொண்டு இருந்தீர்களேயானால் எங்கோ அமைதியாக உட்கார்ந்து கொண்டு என்னை நினைத்துத் தியானம் செய்யும் ஒருவர் அந்த ஆன்மிகத்தின் பலனை அனுபவிக்க நேரிடும்.அதன்பிறகு வருத்தப்பட்டுப் பயனில்லை.* *பறவைகளின் சண்டையால் மரத்திற்கு எந்த அழிவும் இல்லை. அதுபோல உங்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டால் நஷ்டம் உங்களுக்குத்தானே தவிர ஆன்மிகத்திற்கு அல்ல.* *ஆகையால் ஆன்மிக உணர்வுடன், சலசலப்பு இல்லாமல், கருத்து வேற்றுமை இல்லாமல் தொண்டு செய்யுங்கள்.* *யார் யாரோ அம்மாவிடம் வந்து பலனடைகிறார்களே என்று வருந்திப் புலம்புவதில் பயனில்லை. உங்களுக்குள் ஒற்றுமை இல்லையேல் நஷ்டம் உங்களுக்குத்தான்.*

அன்னை ஆதிபராசக்தி அருள்வாக்கு

]]>